பயங்கரவாததடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப் பிள்ளை மோகனை, எதிர்வரும் 12ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி, நேற்று (29) உத்தரவிட்டார்.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் படங்களை இணையத்தளங்களில் பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3ஆம் திகதி ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கப்பட்ட அவர், அன்றைய நாளே பொலிஸ் நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.