வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது கேஸ் அடுப்பு வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதி, மூன்றாம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் பெண்ணொருவர் சமைத்துக் கொண்டிருந்தபோது இன்று பிற்பகல் திடீரென கேஸ் அடுப்பு வெடித்துள்ளது.
இதனையடுத்து குறித்த பெண் கேஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து வவுனியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.