நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 9 நாட்களாக இடம்பெற்ற வாகன விபத்துகளில் 86 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த இரு நாள்களில் மாத்திரம் வீதி விபத்துகளால் 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஜனவரி முதலாம் திகதி 8 பேரும், 02ஆம் திகதி 15 பேரும் வீதி விபத்துகளால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள்கள், ஓட்டோக்களே அதிகளவில் இவ்வாறு விபத்துகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பாதசாரிகளின் கடவைகளில் பயணித்தவர்களும் விபத்துகளால் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
டிசெம்பர் 25 – 31ஆம் திகதி வரையில் பாதசாரிகடவைகளில் இடம்பெற்ற 52 விபத்துகளில் 53 பேர் உயிரிழந்துள்ளதோடு, 2021ஆம் ஆண்டு வீதி விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.