மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தொன்று சிசிரிவி கெமராவில் பதிவாகி உள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
காலி – கொழும்பு வீதியில் அளுத்கம பிரதேசத்தில் மொரகல்ல கனிஷ்ட வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று (06) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருவளையில் இருந்து அளுத்கம நோக்கி முச்சக்கரவண்டி பயணித்துள்ள நிலையில், அதற்கு எதிர்திசையில் மோட்டார் சைக்கிள் பயணித்துள்ளது.
வீதியின் வலதுபுறமாக பயணித்த முச்சக்கரவண்டி மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதை அடுத்து அருகில் இருந்த சுவர் மற்றும் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்தில் அளுத்கம, பூர்வாராம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் ஆபத்தான நிலையில் களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதியை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.