மூன்று கண்கள் மற்றும் நான்கு நாசி துளைகளைக் கொண்ட அபூர்வ கன்றுக்குட்டியொன்றை பசுவொன்று ஈன்றுள்ளது.
சத்தீஸ்கரின் ராஜ்னந்த்காவ்ன் மாவட்டத்தில் உள்ள நவகாவ்ன் லோதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வரும் பசுவொன்று, அண்மையில் இவ்வாறு அபூர்வ கன்றுக்குட்டியொன்றை ஈன்றுள்ளது.
குறித்த கன்றுக் குட்டியை கடவுளின் அவதாரம் எனக் கூறி அப்பகுதி மக்கள் வழிபட்டுவருவதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக் கன்றுக் குட்டியின் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.