ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Friday, May 27
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»இலங்கை செய்திகள்»காணாமல்போனவர்களின் உறவுகளின் போராட்டம் – கலவர பூமியானது மாவட்டசெயலக வளாகம்
    இலங்கை செய்திகள்

    காணாமல்போனவர்களின் உறவுகளின் போராட்டம் – கலவர பூமியானது மாவட்டசெயலக வளாகம்

    AdminBy AdminJanuary 26, 2022No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை பொலிசார் தடுத்து நிறுத்தியமையால் வவுனியா மாவட்டசெயலக வளாகத்தில் பதட்டமான நிலை ஏற்பட்டிருந்ததுடன் பொலிசாருக்கும் போராட்டக்காறர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    நீதி அமைச்சின் ஏற்பாட்டில் “நீதிக்கான அணுகல்” எனும் தொணிப்பொருளில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை ஒன்று இன்றையதினம் இடம்பெற்றது.

    இதில் காணாமல் போனவர்களது உறவுகள் தொடர்பான விசாரணைகளும் இடம்பெறவுள்ளதால் அவர்களது உறவினர்களையும் சமூகம் தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் குறித்த விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (26) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நிகழ்வு இடம்பெறுகின்ற வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டகாரர்கள் உள்நுளைய முற்பட்டனர் எனினும் பொலிசார் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் ஆர்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், குழப்பநிலை ஏற்பட்டது.

    எமது உறவுகள் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டார்கள். எமக்கு இழப்பீடும் மரணச்சான்றிதழும் தேவையில்லை. அதனை மாத்திரம் அவர்களிடம் கூறிவிட்டு வருவதாக போராட்டக்காறர்கள் தெரிவித்தபோதும் அதனை பொருட்படுத்தாத பொலிசார் அவர்களுடன் முரண்பட்டதால் குறித்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்தது.

    பலமணி நேரங்களுக்கு பின்னர் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதன்போது காணாமல் போனவர்களின் உறவுகளுக்கும் அது தொடர்பான விசாரணைகளிற்காக வந்திருந்த அதிகாரிகளிற்கிடையில் கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றது.

    இதன்போது இந்த அரசே எம்மை காணாமல் ஆக்கியது. அவர்களிடம் இருந்து எமக்கான நீதி எவ்வாறு  கிடைக்கும். இதுவரை அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்குக்கும் விசாரணைகளுக்கும் என்ன நடந்தது என்று கேள்வியை எழுப்பியதுடன் மரணச்சான்றிதழையும், இழப்பீட்டையும் ஒருபோதும் பெற்றுக்கொள்ள மாட்டோம்.

    அலுவலகம் வேணாம் என்கிறோம் நீங்கள் ஏன் அதனை எமக்கு திணிக்கின்றீர்கள். இனிமேல் இங்கு வரவேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு சென்றனர். அவர்களுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் முளிபிதுங்கி நின்றனர்.

    இதேவேளை குறித்த பகுதியில் கடமையில் நின்றிருந்த ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெண் போராட்டக்காறர்களை கட்டுப்படுத்தி தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். பொலிசாரின் இச்செயற்பாட்டுக்கு அங்கிருந்த பலரும் தமது அதிருப்தியினை தெரிவித்தனர்.

    Post Views: 109

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    இலங்கை நெருக்கடி: “ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்”

    May 27, 2022

    நட்பு நாடுகளின் உதவிகள் அவசரமாக தேவைப்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

    May 27, 2022

    கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரம் இந்திய நிவாரணப் பொதிகள் வழங்கப்படும்

    May 26, 2022

    Leave A Reply Cancel Reply

    January 2022
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Dec   Feb »
    Advertisement
    Latest News

    மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி 3 மணிநேர வாக்குமூலம் பதிவு

    May 27, 2022

    இலங்கை நெருக்கடி: “ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்”

    May 27, 2022

    பாலியல் தொழில் : ‘வயதுவந்த, சுய ஒப்புதலோடு இதில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது இந்திய உச்ச நீதிமன்றம்

    May 27, 2022

    கணவரை ஓட ஓட விரட்டி அடித்து துவைத்த காதல் மனைவி- வீடியோ வெளியிட்டு பாதுகாப்பு கேட்ட கணவர்

    May 27, 2022

    No Deal Gama போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி

    May 27, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி 3 மணிநேர வாக்குமூலம் பதிவு
    • இலங்கை நெருக்கடி: “ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்”
    • பாலியல் தொழில் : ‘வயதுவந்த, சுய ஒப்புதலோடு இதில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது இந்திய உச்ச நீதிமன்றம்
    • கணவரை ஓட ஓட விரட்டி அடித்து துவைத்த காதல் மனைவி- வீடியோ வெளியிட்டு பாதுகாப்பு கேட்ட கணவர்
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version