ஆசிரியரின் வீட்டுக்குச் சென்ற போது நுழைவாயில் கதவு உடைந்து விழுந்து சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தம்புத்தேகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
நேற்று காலை தம்புத்தேகம பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நுழைவாயில் கதவு விழுந்து படுகாயமடைந்த சிறுமி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி 6 வயதுடைய முலஸ்பிடிய – டீ 2 எல வீதி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
தம்புத்தேகம பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.