இந்தியாவின் இசைக் குயில் என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமக உயிரிழந்தார். பல ஆயிரம் பாடல்களை பாடி அவர், சுமார் 30 மொழிகளில் பாடியுள்ளார் என்பது அசத்தலான விடையம்.
ஆனால் தமிழல் மட்டும் அவர் 3 பாடல்களை மட்டும் தான் பாடி உள்ளார். அதுவும் இளையராஜவின் இசையில். நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் குடும்பத்தினர்(பிரபு) லதா மங்கேஷகர் குடும்பத்தோடு நெருங்கிய உறவில் உள்ளவர். அவர் மூலமாகவே லதா மங்கேஷகர் அழைத்து வரப்பட்டு இளையராஜா இசையில், முதன் முதலாக பாடினார். ”ஆனந்” படத்தில் ஆராரோ ஆராரோ நீவேறோ… என்ற பாடலை பாடினார். பின்னர்
1988ல் கமல் மற்றும் அமலா நடித்து வெளியான சத்தியா படத்தில், வளையோச கல கலவென என்ற் பாடலை பாடினார். மேலும் 3வது பாடல் மற்றும் கடைசி பாடல் அதுவும் 1988ல் என் ஜீவன் பாடுது படத்தில் .எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்ற பாடல் தான்.
தற்போது அவர் 370 கோடி சொத்து மதிப்பை விட்டுச் சென்றுள்ளார். 1942ம் ஆண்டில் திரை உலகில் காலடி எடுத்து வைத்த வேளை வெறும் 25 ரூபாவுக்கு அவர் பாடி வந்தார். ஆனால் 2020ல் அவர் பாடல்களுக்கு 40 லட்சம் வரை கொடுக்கப்பட்டது. ஒரு பாடலுக்கு 40 லட்சம் ரூபா வரை அவர் வாங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடையம். அவர் பாடிய 3 தமிழ் பாடல்களின் வீடியோக்கள் கீழே இணைப்பு.