மஸ்கெலியா – காட்மோர் கிங்கொரோ பிரிவில் உள்ள வீடு ஒன்றின் மீது பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (13) மாலை 6.45 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை, 32 வயது தாய், மற்றும் 65 வயது ஆண் ஒருவருமே காயமடைந்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் டிக்யகோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் பின்பக்கமாக இருந்த மண்மேடு ஒன்றே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.