பதுளை கொஸ்லந்தை பகுதியில், துப்பாக்கி இயங்குகின்றதா என இளைஞர் ஒருவர் சிறுவன் ஒருவரின் வாயில் வைத்து பரிசோதனை செய்த போது, துப்பாக்கியின் ரவை பாய்ந்ததினால், குறித்த சிறுவன் ஆபத்தான நிலையில் , பதுளை அரிசின் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் துப்பாக்கியை பரிசோதனை செய்த 21 வயது இளைஞன் கொஸ்லந்தை பொலிசாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஸ்லந்தைப் பகுதியின் கெலிப்பனவெல என்ற கிராமத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதே கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவனின் வாயிலேயே, துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில். கெலிப்பனவெல கிராமத்தில். 21 வயதான இளைஞன், தம்மிடமிருந்த உள்ளுர்த் தயாரிப்பு கைத்துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, அருகிலிருந்த சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்து, துப்பாக்கியை, துப்பாக்கியை இயங்க வைத்து பரிசோதனை செய்திருக்கின்றார்.
இதன்போதே துப்பாக்கி ரவை பாய்ந்து வெடித்திருக்கின்றமை ஆரம்ப பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கி சூடுபட்ட 12 வயது சிறுவன், பிரதேச வைத்தியசாலையில் ஆரம்பசிகிச்சைகள் வழங்கப்பட்டு, அச்சிறுவன் பதுளை அரசினர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், சிறுவனின் நிலைக்கவலைக் கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.