திருப்பூரை சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 12-ம்வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் அவர் போயம்பாளையத்தில் உள்ள அவரது தோழி வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
அப்போது தோழியின் உறவினரும் கார் டிரைவருமான நவீன் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. கடந்த 3 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.
மேலும் நவீன் மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதுடன், ஆசைவார்த்தைகளை கூறி அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.
விடுதிகள் மட்டுமல்லாது பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார்.
யாராவது சந்தேகப்படும்படி கேட்டால் தனது தங்கை என்று கூறி அழைத்து சென்றுள்ளார். உல்லாசம் அனுபவிக்கும் போது நவீன் மாணவிக்கு தெரியாமல் செல்போனில் ரகசியமாக வீடியோவும் எடுத்து வைத்துள்ளார்.
இது மட்டுமின்றி இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்பியும் எடுத்துள்ளனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை நவீன் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார்.
இந்தநிலையில் நாட்கள் செல்ல செல்ல நவீனின் நடத்தை பிடிக்காததால் மாணவி அவருடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார்.
நவீன் பலமுறை மாணவியை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அந்த மாணவி பேசவில்லை. வீட்டிற்கு சென்று மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் அழைத்து பார்த்தும் நவீனுடன் வெளியே செல்ல மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த நவீன் சில தினங்களுக்கு முன்பு மாணவியை சந்தித்து பேசியதுடன் , உன்னுடன் உல்லாசம் அனுபவித்த படங்கள் , வீடியோக்கள் எனது செல்போனில் பதிவேற்றம் செய்துள்ளேன்.
என்னுடன் பழகவில்லையென்றால் அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இருப்பினும் மாணவி அதனை பொருட்படுத்தவில்லை.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு மாணவியின் தாய் செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் மாணவியின் ஆபாச வீடியோக்களை நவீன் அனுப்பினார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இது பற்றி மகளிடம் கேட்ட போது அவர் நடந்த விவரத்தை கூறினார்.
இதைத்தொடர்ந்து உடனே திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நவீனை கைது செய்தனர்.
மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதனையிட்டதில் அதில் மாணவியின் ஆபாச படங்கள், வீடியோக்கள் ஏராளமாக இருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக நவீனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர் மாணவி போன்று வேறு பெண்களை ஆபாச படங்கள் எடுத்து மிரட்டியுள்ளாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .
விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.