சுவிஸில் உள்ள வோ( VAUD) மாகாணத்தில் அமைந்துள்ள Lavusanne என்னும் இடத்தில் சனிக்கிழமை காலை ஜவுளி மற்றும் காலணிகளை சேகரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிக்குள் 36 வயதான பெண் ஒருவர்உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ார்,
8மணியளவில் பழைய உடைகள் போடும் பச்சை நிற குப்பைத்தொட்டியை அதை காலி செய்ய வந்த இரு ஊழியர்கள்தான் இதைக் கண்டுபிடித்தனர்.
ஊழியர்கள் இருவரும் பூட்டைத் திறந்தபோது, கருப்பு குப்பை பை வழக்கத்தை விட கனமாகவும் பருமனாகவும் தோன்றியது.
ஆச்சரியத்துடன் அதை திறந்து பார்த்தபோது இந்த பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்தனர், ”
இது சம்பந்தமாக பப்ளிக் பிராசிகியூட்டர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, லொசேன் நீதித்துறை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்தி வாசிக்க . https://www.msn.com/fr-ch/actualite/other/retrouv%c3%a9e-morte-dans-un-sac-au-milieu-des-textiles/ar-AAU5UW7?ocid=MSNHP_W099&li=BBqiMbH
சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தைச் சுற்றி சனிக்கிழமை காலை முழுவதும் பொலிசாரால் கட்டுப்படுத்தப்பட்டது