யாழ். கொக்குவில் தொழிநுட்ப கல்லூரிக்கு அருகில் புகையிரதத்தில் மோதி இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் 23 வயதான ராஜ்குமார் ஜெயந்தினி எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் தொழிநுட்ப கல்லூரிக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.