ஏழாவது நாளாக தொடரும் போர் – யுக்ரேனின் முக்கிய நகரங்களை நெருங்கும் ரஷ்ய துருப்புக்கள் – தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை.
முக்கிய சாராம்சம்
- அமெரிக்க வான் பரப்பில் இருந்து ரஷ்ய விமானங்களைத் தடை செய்யத் திட்டம்
- யுக்ரேனின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான கார்கிவ் மீது நடந்த பீரங்கி தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர், 112 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த நகர மேயர் தெரிவித்துள்ளார்.
- ஐரோப்பிய விமான நிறுவனமான விஸ் ஏர் (Wizz Air), யுக்ரேனிய அகதிகளுக்கு, அவர்களின் குறுகிய தூர விமானங்களில் 1,00,000 பேருக்கு இலவச இருக்கைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
- யுக்ரேனின் கார்கிவில் உள்ள இந்தியர்கள், எந்த சூழலில் இருந்தாலும் அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி யுக்ரேனிய நகரங்களான பெசோச்சின், பாபே மற்றும் ரஷ்யாவின் பெஸ்லியுடோவ் நகருக்கு செல்லுமாறு இந்திய தூ
- யுக்ரேனில் உள்ள இந்திய தூதரகம் கீயவில் இருந்து லுவீவ் பகுதி மாற்றப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்துள்ளார்.
- ஜைட்டோமோய்ர் நகரின் மீது நடந்த விமானத் தாக்குதலில் இருவர் பலி
- யுக்ரேனுக்கு 3 பில்லியன் டாலர் வழங்குவதற்குத் தயாராகும் உலக வங்கி
- விளாதிமிர் புதினை எச்சரித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
- யுக்ரேனில் படித்து வந்த பஞ்சாப் மாநிலம் பர்னாலாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சந்தன் ஜிண்டால் இன்று பிற்பகல் அங்குள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
- யுக்ரேனின் கிழக்கு கார்கிவ் நகரில் உள்ள நகர நிர்வாக கட்டடத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கியதாக அந்த பகுதியின் துணை ஆளுநர் கூறியிருக்கிறார். இந்த பகுதி ரஷ்ய எல்லையில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ளது