நினா (அவரின் பெயர் மாற்றப்பக்கபட்டுள்ளது)”நகரம் தற்போது அமைதியாக உள்ளது.
நேற்றும் அமைதியாகதான் இருந்தது. ஆனால் இதற்கு முன்னதாக இங்கு சண்டையும் வெடிப்புச் சம்பவங்களும் நிகழ்ந்துக் கொண்டிருந்தன.”
“நேற்று யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. நிலைமை மிகவும் ஆபத்தாக இருந்தது. ஆனால் இன்று மக்கள் வெளியே சென்று உணவுப் பொருட்களை வாங்க முயற்சித்து வருகின்றனர்”
“இருப்பினும் நகரின் புறநகர் பகுதிகளில் சண்டை நடைபெறும் சத்தங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“எங்களுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்ய படை வீரர்களை நாங்கள் சீண்டக் கூடாது என எங்கள் அரசுடன் சேர்ந்து அவர்கள் விதிகளை வகுத்துள்ளனர்.”
“நாங்கள் கூட்டமாக இருக்கக்கூடாது. காரை வேகமாக ஓட்ட கூடாது. காரில் உள்ளதை காட்டை நாங்கள் தயாராக இருக்க வேண்டும். யாரையும் சீண்டக் கூடாது.”
“குடியிருப்புவாசிகளுக்கு தற்போது நீர், மின்சாரம் மற்றும் இணைய வசதிகள் எல்லாம் உள்ளன. அதேபோல மருத்துவசதிகளும் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.”
“வெகு சீக்கிரத்தில் நிலைமை சரியாகும் என நம்புகிறோம்”
“சாதரண மனிதர்கள் எந்த ஒரு போர்க்கும் எதிராகதான் உள்ளோம். ஆனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது”