தூத்துக்குடியில் திருமணமான 4 மாதத்தில் மனைவியை கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த கணவர் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி, தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரின் மகள் மாரிச்செல்வி. இவருக்கும் அண்ணாநகர் 10வது தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.
பொன்ராஜ், கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். திருமணமான நாளிலிருந்து மனைவி மாரிச்செல்வி, அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே இருப்பாராம்.
இதை பொன்ராஜ் கண்டித்துள்ளார். இதனால், தம்பதியரிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் இருவருக்குமிடையே
சோகத்தில் உறவினர்கள்
இதனையடுத்து, மாரிச்செல்வியை தாளமுத்துநகரில் உள்ள அவரின் அப்பா சண்முகம் வீட்டில் விட்டு விட்டாராம்.
இரண்டு நாள்களுக்கு முன்பு பொன்ராஜின் மாமியார் மாரியம்மாள் பொன்ராஜூக்கு போன் செய்து, ”மகளை அழைத்துச் செல்லுங்கள்” எனக் கூறினாராம்.
ஆனால், ”அவளுடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை. உங்கள் மகளை வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள்” எனச் சொல்லி விட்டாராம் பொன்ராஜ். இதனால் இரு வீட்டாருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
.
இந்த நிலையில், நேற்று இரவு பொன்ராஜ், தனது நண்பர்கள் இருவருடன் மாரிச்செல்வியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென மாரிச்செல்வியை அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற அவரின் மாமியார் மாரியம்மாளின் கை பகுதியில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதில், மாரிச் செல்வி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 4 மாதங்களே ஆனதால், தூத்துக்குடி கோட்டாட்ச்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக பொன்ராஜ், அவரது நண்பர்களான முத்துக்குமார், மந்திரமூர்த்தி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
வீடு புகுந்து மனைவியை கணவனே சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.