ரஷியாவின் அரசு செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பெண் தொகுப்பாளர் நேரலையில் செய்தி வாசித்து கொண்டு இருந்த போது திடீரென பெண் ஒருவர் உள்ளே நுழைந்தார்.
மாஸ்கோ,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 19-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.
இந்த நிலையில் ரஷியாவின் அரசு செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பெண் தொகுப்பாளர் நேரலையில் செய்தி வாசித்து கொண்டு இருந்த போது திடீரென ” போரை நிறுத்துங்கள் என்ற முழக்கத்தோடு கையில் பதாகையை ஏந்தி கொண்டு பெண் ஒருவர் உள்ளே நுழைந்தார்.
ஆங்கிலம் மற்றும் ரஷிய மொழியில் அந்த பதாகையில் எழுத்துக்கள் இடம்பெற்று இருந்தது .அதில்,”போர் வேண்டாம். போரை நிறுத்துங்கள். பிரச்சாரத்தை நம்பாதீர்கள். உங்களிடம் பொய் சொல்கிறார்கள் ” என எழுதப்பட்டு இருந்தது.
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
உக்ரைனில் இராணுவத் தாக்குதலை விமர்சிக்கும் பலகையுடன் கிரெம்ளின் சார்பு செய்தி ஒளிபரப்பில் நுழைந்த ஒரு பெண் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். இதை அவரது வழக்கறிஞர் செவ்வாய்கிழமை AFPயிடம் தெரிவித்துள்ளார்.