யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றி வருகிறார். யுக்ரேன் அதிபரை நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பெலோஸி அறிமுகம் செய்தார்.
அப்போது ஸெலென்ஸ்கியின் “தைரியமான தலைமை மீது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்” என தெரிவித்தார்.
இதையடுத்துபேசிய ஸெலென்ஸ்கி அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது இந்த நகரம் தினசரி ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது எனவும், ஆனால், எப்போதும் “விட்டுக்கொடுக்காது” எனவும் தெரிவித்தார்.
“விட்டுக்கொடுப்பது குறித்து ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை,” என அவர் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான மோசமான போரை யுக்ரேன் சந்தித்து வருவதாகவும், கடந்த 8 ஆண்டுகளாக ரஷ்யவின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.