உக்ரேனில் உயிரிழந்த இந்திய மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் இன்று (21) அதிகாலை பெங்களூர் விமான நிலையத்துக்கு இராணுவ பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து அவரது உடலை அவருடைய பெற்றோரும் இராணுவ உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் நவீனின் உடலுக்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அஞ்சலி செலுத்தியதோடு நவீனின் உடலை இந்தியா கொண்டு வர உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
இதனையடுத் நவீனின் உடல் அவரது சொந்த ஊரான கர்நாடக மாநிலத்தின் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் மேற்கொள்ள இருப்பதாகவும், பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின்னர் அவரது உடலை மருத்துவமனைக்கு தானமாக அளிக்கவுள்ளதாகவும் அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.