பெல்ஜியம் நாட்டில் தெருக் களியாட்ட திருவிழா ஒன்றில் சாரதி ஒருவர் காரைவேகமாகச் செலுத்தித் தாக்கியதில் ஏழுபேர் உயிரிழந்தனர். இருபது பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
பெல்ஜியத்தில் மிகவும் பிரபலமானவருடாந்த தெருவிழாவிலேயே (carnival of Strépy-Bracquegnies) இன்று விடிகாலை ஐந்து மணியளவில் இந்தச் சம்பவம்நடந்தது.
களியாட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒரு நாட்டுப்புறக் குழுவினர் மீதுமிக வேகமாக வந்த கார் மோதியுள்ளது.
குழந்தை உட்பட நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தென்பகுதிLa Louvière என்ற நகரத்தின் மேயர் தெரிவித்திருக்கிறார்.படுகாயமடைந்தவர்களில் மூவர் அவசர சிகிச்சைகளின் போது உயிரிழந்தனர்.
களியாட்ட மக்கள் மீது காரைக் கண்டபடிசெலுத்திய சாரதியை காவல்துறையினா் துரத்திச் சென்று கைதுசெய்தனர்.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் காவல்துறையினருடனான பகைமையோ அல்லது பயங்கரவாத நோக்கங்களோ இருப்பதாகத் தெரியவரவில்லை என்பதை விசாரணையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்