ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, May 22
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»Flash News Fed 001»இரண்டாம் உலகப் போரின் போக்கை மாற்றிய ஹிட்லரின் மாபெரும் தவறுகள்
    Flash News Fed 001

    இரண்டாம் உலகப் போரின் போக்கை மாற்றிய ஹிட்லரின் மாபெரும் தவறுகள்

    adminBy adminMarch 25, 2022No Comments8 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    1941 ஜூன் 22ஆம் தேதி. நாஜி ஜெர்மனி, சோவியத் யூனியனுக்கு எதிரான ஒரு பெரிய தாக்குதல் நடவடிக்கையான ஆபரேஷன் பார்பரோசாவைத் தொடங்கியது. அந்த நேரத்தில் சோவியத் யூனியனின் அதிகாரம் ஸ்டாலினின் கைகளில் இருந்தது.

    இது வரலாற்றின் மிகப்பெரிய ராணுவத் தாக்குதல் என்று கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போரை தனக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில் அடோல்ஃப் ஹிட்லர் அந்த நேரத்தில் விளையாடிய ஓர் ஆபத்தான பந்தயம் இது.

    ஆனால் ஜெர்மனியின் தலைவர் ஹிட்லர் விரும்பிய விதமாக விஷயங்கள் நடக்கவில்லை. இந்த நடவடிக்கையின் தோல்வியை, இரண்டாம் உலகப் போரின் ஒரு திருப்புமுனையாகவும், ஜெர்மன் ஆதிக்கத்தின் முடிவின் தொடக்கமாகவும் வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

    ஆபரேஷன் பார்பரோசா இரண்டு சர்வாதிகார வல்லரசுகளுக்கிடையில் ஆறு மாத கால கடுமையான போரை ஆரம்பித்துவைத்தது.

    இது இரண்டாம் உலகப் போருக்கு தீர்க்கமான முடிவைக் கொண்டுவரப் போகும் நடவடிக்கையாகவும் இருந்தது.

    ஆபரேஷன் பார்பரோசா, 12ஆம் நூற்றாண்டின் புனித ரோமானிய பேரரசர் ஃப்ரெடெரிக் பார்பரோசாவின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

    சோவியத் யூனியன் மீதான ஜெர்மனியின் படையெடுப்புடன், 1939ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஜெர்மன்-சோவியத் ஒப்பந்தமும் முறிந்தது.

    அச்சு நாடுகளின் (Axis powers) படைகள்( ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பானை சேர்ந்த வீரர்கள்) 30 லட்சம் பேரை மூன்று குழுக்களாகப் பிரிந்து லெனின்கிராட், கீவ் மற்றும் மாஸ்கோவை குறிவைத்தன.

    இந்த திடீர் தாக்குதலால் சோவியத் ராணுவம் திகைத்துப்போனது. முதல் போரில் அது பெரும் இழப்புகளை சந்தித்தது. இந்தப்போரில் பல லட்சம் பேர் இறந்ததாக நம்பப்படுகிறது. கீவ், ஸ்மோலென்ஸ்க் மற்றும் வியாஸ்மா போன்ற நகரங்கள் நாஜிகளால் கைப்பற்றப்பட்டன.

    இருப்பினும், ஜெர்மன் படைகளும் பெரும் இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. சோவியத் பாதுகாப்பின் படிப்படியான முன்னேற்றம் மற்றும் ரஷ்யாவின் உறைபனி காரணமாக ஜெர்மன் காலாட்படையின் முன்னேற்றம் டிசம்பரில் நின்றுபோனது.

    ஆயினும்அந்த நேரத்தில் ஜெர்மன் ராணுவம் மாஸ்கோவை அடைந்துவிட்டது என்பது கவனிக்கத்தக்கது. .

    இதற்கிடையில், ஜெர்மன் ராணுவம் லெனின்கிராட்டில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்காது, ஒரு நீண்ட முற்றுகை நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று ஹிட்லர் முடிவு செய்தார்.

     

    ஆரம்ப தாக்குதல்களில் இருந்து சோவியத் படைகள் தப்பித்தாலும், ஜெர்மன் படைகள் 1942இல் ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கி சோவியத் யூனியனுக்குள் ஊடுருவின.

    1942 மற்றும் 1943 க்கு இடையிலான ஸ்டாலின்கிராட் போர், நிலைமையை மாற்றியது. இறுதியில் ஜெர்மன் படைகள் பின்வாங்க வேண்டியிருந்தது.

    ஜெர்மன் தாக்குதல்களால் சோவியத் யூனியனின் குடிமக்கள் அதீத துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

    அவர்களில் யூதர்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டனர். 10 லட்சத்திற்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்டனர். யூதர்களை முற்றிலுமாக அழிக்க ஹிட்லர் திட்டமிட்டிருந்தார்.

    அந்த ரானுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ராணுவ வரலாறு மற்றும் இரண்டாம் உலகப் போரில் நிபுணரான பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஆண்டனி பீவர், பிபிசி ஹிஸ்டரி அளித்த 10 கேள்விகளுக்கு பதிலளித்து, ஹிட்லர் செய்த பெரிய தவறுகளைப் புரிந்து கொள்ள முயன்றார்.

    1. சோவியத் யூனியனைத் தாக்க ஹிட்லருக்கு நீண்டகால திட்டம் இருந்ததா?

    அடோல்ஃப் ஹிட்லர் பெரும் ஆக்கிரமிப்புகள் மீதான தனது அணுகுமுறையை விரைவாக மாற்றிக்கொண்டார். ஆனால் சோவியத் யூனியன் மீதான அவரது படையெடுப்பு முதலாம் உலகப் போரின் இறுதி வரை செல்கிறது என்று நான் நினைக்கிறேன்.

    போல்ஷோவிசம் ( ரஷ்ய கம்யூனிசம்) குறித்த வெறுப்பு அவருக்குள் நிறைந்திருந்தது. ஆனால் 1918இல் உக்ரைன் மீதான ஜெர்மானிய ஆக்கிரமிப்பாலும், எதிர்காலத்தில் போல்ஷோவிசம் செழிக்கக்கூடும் என்ற எண்ணத்தாலும் இந்த வெறுப்பு மேலும் வலுப்பெற்றது.

    இந்த பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வதன்மூலம், முதலாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் வறட்சியை ஏற்படுத்திய பிரிட்டிஷ் முற்றுகையைத் தடுக்கமுடியும் என்ற கருத்தும் இருந்தது. எனவே இது ஒரு செயல்தந்திர முடிவோடு கூடவே இயற்கையான முடிவாகவும் இருந்தது.

    உண்மை என்னவென்றால், 1940 டிசம்பர் வரை இந்த திட்டம் முழுமையாக தயாரிக்கப்படவில்லை. சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தப்போரில் இருந்து பிரிட்டனை அகற்ற சோவியத் யூனியன் மீதான தாக்குதல்தான் ஒரே வழி என்று தனது தளபதிகளிடம் ஹிட்லர் கூறி அதை நியாயப்படுத்தினார்.

    சோவியத் யூனியன் தோற்கடிக்கப்பட்டால், சரணடைவதைத் தவிர பிரிட்டனுக்கு வேறு வழியில்லை.இது அந்தக் காலத்தின் நிலைமைகள் குறித்த சிறப்பு பகுப்பாய்வு.

    2. ஜெர்மன்-சோவியத் ஒப்பந்தம் ஹிட்லருக்கு ஒரு தற்காலிக தீர்வை விட மேலானதாக இருந்ததா?

    ஜொயாசிம் வான் ரிப்பன்ட்ராப் (இடது), ஸ்டாலின் மற்றும் மொலொடாவ் (வலது) – ஆகஸ்ட் 23, 1939ல் ஒப்பந்தம் கையெழுத்திட்டபோது

    ஜொயாசிம் வான் ரிப்பன்ட்ராப் (இடது), ஸ்டாலின் மற்றும் மொலொடாவ் (வலது) – ஆகஸ்ட் 23, 1939ல் ஒப்பந்தம் கையெழுத்திட்டபோது

    இது வேண்டுமென்றே செய்யப்பட்டது. முதலில் மேற்கத்திய கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதை ஹிட்லர் புரிந்து கொண்டார்.

    இது அவரது அசாதாரண தன்னம்பிக்கையை காட்டுகிறது, குறிப்பாக பிரெஞ்சு ராணுவம் அந்த நேரத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்பட்டது.

    நாஜிகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான ரிப்பன்ட்ரோப்-மோலோடோவ் ஒப்பந்தத்தின் காரணமாக ஐரோப்பாவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பல தசாப்தங்களாக அவதிப்பட நேர்ந்தது.

     

    முதலாளித்துவ நாடுகளும், நாஜிகளும் ஒருவர்மீது ஒருவர் தாக்குதல் தொடுத்து ரத்தக்களறியில் அழிந்துவிடுவார்கள் என்று ஸ்டாலின் மிகவும் நம்பினார்.

    மறுபுறம், ஜெர்மன்-சோவியத் உடன்படிக்கை ஸ்டாலினுக்கும் தேவையாக இருந்தது. ஏனெனில் அவர் சமீபத்தில்தான் தனது செம்படையை கலைத்திருந்தார். மேலும் ஜெர்மனியுடன் மோதல் ஏற்படுவதையும் அவர் தடுக்க நினைத்தார்.

    3. தாக்குதலைத் தொடங்க ஜெர்மனி நீண்ட நேரம் காத்திருந்தது என்று பெரும்பாலும் விமர்சிக்கப்படுகிறது. இதற்கு நீங்கள் உடன்படுகிறீர்களா?

    உக்ரைனில் ஜெர்மனி வீரர்கள்

    நிச்சயமாக. ஆபரேஷன் பார்பரோசா மிகவும் தாமதமாகத் தொடங்கியது என்பது உண்மைதான். அது ஏன் தாமதமானது என்பது குறித்து நிறைய விவாதங்கள் உள்ளன.

    1941 ஏப்ரலில் கிரேக்கம் மீதான தாக்குதல் காரணமாக அதை நிறுத்த வேண்டியிருந்தது என்பது பொதுவாக கூறப்படும் ஒரு காரணம். ஆனால் முக்கிய காரணம் காலநிலை என்று சொல்லலாம்.

    1940-1941 குளிர்காலத்தில், பலத்த மழை பெய்தது. இது இரண்டு சிக்கல்களை உருவாக்கியது. முதல் சிக்கல் என்னவென்றால், ஜெர்மன் இராணுவ விமானப் போக்குவரத்து லுஃப்ட்வாஃப்பே முன்னரங்க விமானதளம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியிருந்தது. இந்த தண்ணீர் முவுவதுமாக வற்றும்வரை விமான போக்குவரத்தை துவக்க முடியவில்லை.

    இரண்டாவது சிக்கல் என்னவென்றால், மோசமான வானிலை காரணமாக கிழக்கு முன்னரங்கப்பகுதியில் போக்குவரத்து வாகனங்களை நிறுத்துவது தாமதமானது. மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், ஜெர்மன் மோட்டார் போக்குவரத்து பிரிவில் 80 சதவிகிதம் பேர், தோற்கடிக்கப்பட்ட பிரெஞ்சு ராணுவத்திலிருந்து வந்தவர்கள்.

    ஸ்டாலின் பிரெஞ்சுகாரர்களை வெறுக்க இதுவே காரணம். அவர்கள் துரோகிகளாகவும், எதிரி கூட்டாளிகளாகவும் கருதப்பட வேண்டும் என்று 1943 ல் நடந்த தெஹ்ரான் மாநாட்டில் ஸ்டாலின் வாதிட்டார்.

    அவர்கள் சரணடைந்தபோது தங்கள் வாகனங்களை அழிக்கவில்லை என்பது உண்மை. இந்த விஷயத்தை ஸ்டாலின் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டார்.

    4. ஸ்டாலின் சந்தேகப்படும் குணம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் ஜெர்மன் தாக்குதல் குறித்த பல எச்சரிக்கைகளை அவர் ஏன் புறக்கணித்தார்?
    ஜெர்மன் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து அவர்கள் விட்டுச்சென்ற பொருட்களை ஆராயும் சோவியத் ராணுவ வீரர்கள்

    ஜெர்மன் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து அவர்கள் விட்டுச்சென்ற பொருட்களை ஆராயும் சோவியத் ராணுவ வீரர்கள்

    இது வரலாற்றில் இருக்கும் மிகப்பெரிய முரண்பாடுகளில் ஒன்றாகும். எல்லாவற்றையும் சந்தேகித்த ஸ்டாலின், ஹிட்லரால் ஏமாற்றப்பட்டார். இதன் காரணமாக பல விஷயங்கள் வெளியாயின. அவற்றில் ஒன்று முதலில் ஜெர்மனியைத் தாக்க ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார் என்பதாகும்.

    ஆனால் இதில் எந்த உண்மையும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் இந்த விஷயம் சோவியத் யூனியனின், 1941 மே 11 ஆம் தேதியிட்ட அவசரகால ஆவணத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    ஜெனரல் ஜுகோவ் மற்றும் நாஜி தாக்குதல் திட்டங்களை நன்கு அறிந்த மற்றவர்கள் , எதிர் தாக்குதல் பற்றி விவாதித்தனர் என்று இந்த ஆவணம் தெரிவிக்கிறது.

    அவர் விவாதித்த விஷயங்களில் ஒன்று முன்கூட்டியே தாக்குதல் நடத்துவதாகும். ஆனால் ஸ்டாலினின் ‘செம்படை’ அந்த நேரத்தில் அவ்வாறு செய்யக்கூடிய நிலையில் இல்லை.

    சிக்கல்களில் ஒன்று என்னவென்றால், பீரங்கிகளை எடுத்துச் செல்லும் டிராக்டர்கள் அந்த நேரத்தில் பயிர்களை அறுவடை செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தன.

    ஆனால் ஸ்டாலின் எல்லா எச்சரிக்கைகளையும் எப்படி புறந்தள்ளினார் என்பது மிகவும் சுவாரஸ்யமானது. இந்த எச்சரிக்கையை அவர் பிரிட்டனிடமிருந்து பெற்றது மட்டுமல்லாமல், அவரது சொந்த தூதாண்மை அதிகாரிகளும், உளவாளிகளும் கூட அவரை எச்சரித்தனர்.

    வெளிநாட்டில் வாழும் அனைவருமே ஊழல்வாதிகள் மற்றும் சோவியத் விரோதிகள் என்று ஸ்பெயினின் உள்நாட்டுப் போரிலிருந்து அவர் உறுதியாக நம்பியிருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது..

    எனவே பெர்லினிலிருந்து தகவல் கிடைத்ததும் அவர் அதைப் புறக்கணித்தார். ஜெர்மன் படையினரின் ஒரு சிறிய அகராதி அவருக்கு அனுப்பப்பட்டது.

    அதில் ‘என்னை உங்கள் வகுப்புவாத வடிவத்தில் அழைத்துச் செல்லுங்கள்’ போன்ற வெளிப்பாடுகள் இருந்தன. ஆனால் ஜெர்மனியுடன் சண்டையிடச்செய்ய பிரிட்டிஷ்காரர்கள் நடத்தும் ஒரு நாடகம் இது என்று ஸ்டாலின் முழுமையாக நம்பினார்.

    எவ்வாறாயினும், பிரிட்டிஷ் குண்டுவீச்சாளர்களின் தாக்குதலில் இருந்து தப்பவே பல வீரர்கள் கிழக்கு நோக்கி வருகிறார்கள் என்ற ஹிட்லரின் கூற்றையும் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் எதிரி ராணுவத்தை எதிர்க்கமுடியாத அளவிற்கு அந்த நேரத்தில் ஸ்டாலின் பலவீனமாக இருந்தார்.

    5. ஜெர்மனியின் நோக்கம் என்ன? சோவியத் யூனியனை முழுமையாக கைப்பற்ற ஜெர்மனி உண்மையில் விரும்பியதா?

    ‘ஆர்க்காங்கஸ்க்’ இல் இருந்து ‘அஸ்ட்ராகான்’ வரை (ஏ-ஏ) லைனை நீட்டிக்க திட்டம் இருந்தது. இது நடந்திருந்தால், மாஸ்கோவையும் வோல்காவையும் தாண்டி முன்னேற ஜெர்மன் துருப்புக்களுக்கு இது உதவியிருக்கும்.

    எனவே ஸ்டாலின்கிராட் போர் வெடித்தபோது, ​​ நகரைக் கைப்பற்றி வோல்காவை அடைந்தால் போரை வென்றுவிடலாம் என்று பல ஜெர்மன் வீரர்கள் நினைத்தார்கள்.

    படையெடுப்பின் தொடக்கத்தில் பெரும் சண்டையிலிருந்து தப்பிய சோவியத் துருப்புக்களை தனிமைப்படுத்தி, குண்டுவீசி அவர்களை ஒரே இடத்தில் சூழ்ந்துகொண்டுவிடலாம் என்று திட்டமிடப்பட்டது.

    இதற்கிடையில், ரஷ்யா மற்றும் உக்ரைனின் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை, ஜெர்மன் காலனிகள் மற்றும் குடியேற்றங்களுக்கு திறக்கவும் திட்டமிடப்பட்டன.

    “ஜெர்மன் பசித் திட்டத்தின்படி’, பல முக்கிய நகரங்களில் உள்ள மக்கள் பசியால் இறந்துவிடுவார்கள். இறப்பு எண்ணிக்கை மூன்று கோடியே ஐம்பது லட்சமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டது.

    ஆனால், ஏஏ லைனின் விரைவான விரிவாக்கம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பெரிய முற்றுகையால் செம்படையின் வலிமையை முற்றிலுமாக தகர்ப்பது ஆகியவற்றை பொருத்தே இந்த முழுத்திட்டத்தின் வெற்றி அமையும்.

    இவற்றில் சில நடந்தன. உதாரணமாக, மனித வரலாற்றில் கைப்பற்றப்பட்ட கைதிகளின் அடிப்படையில் ‘கீவ்’, உலகின் மிகப்பெரிய போர்களில் ஒன்றாக நிரூபிக்கப்பட்டது.

    6. ஜெர்மனிக்கு வெற்றி வாய்ப்பு இருந்ததா?

    ஹிட்லர்

     

    1941 இன் பிற்பகுதியில் ஸ்டாலின் பல்கேரிய தூதரிடம், மாஸ்கோ கைப்பற்றப்படலாம் என்றும் எல்லாம் சிதைந்து விடும் என்று தான் நினைத்ததாகவும் கூறினார்.

    ஆனால் தூதர் ஸ்டேமெனோவ், “அவர் பைத்தியம். அவர் பின்வாங்கி யூரல் மலைப்பக்கம் சென்றால்தான் அவரால் வெற்றி பெறமுடியும்” என்று பதிலளித்தார்.

    ஆபரேஷன் பார்பரோசா ஏன் தோல்வியடையப் போகிறது என்பதற்கான முக்கியமான தகவலை இது சுட்டிக்காட்டுகிறது என்று நான் கருதுகிறேன்.

    சோவியத் யூனியனின் பரப்பளவை பார்க்கும்போது, ஜெர்மன் ராணுவத்திடமும், அதன் நட்பு நாடுகளான ருமேனியா மற்றும் ஹங்கேரியிடமும் இவ்வளவு பெரிய பகுதியைக் கைப்பற்றி ஆக்கிரமிக்க போதுமான துருப்புக்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

    இரண்டாவதாக, சீனா மீதான ஜப்பானிய நடவடிக்கையிலிருந்து ஹிட்லர் எந்தப் படிப்பினையும் கற்றுக் கொள்ளவில்லை. இதில் இயந்திரமயமான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த ஒரு நாடு, அளவில் மிகப்பெரிய ஒரு நாட்டை தாக்கியது.

    ஆரம்பத்தில் நீங்கள் வெல்லக்கூடும் என்று அது காட்டுகிறது. ஆனால் சோவியத் யூனியனுக்கு எதிராக ஹிட்லர் பயன்படுத்திய மிருகத்தனத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் பயம், அராஜகத்திற்கு எதிரான மாபெரும் எதிர்ப்பை உருவாக்குகிறது.

    இதை ஹிட்லர் ஒருபோதும் கருத்தில் கொள்ளவில்லை.. ‘நீங்கள் கதவை உதைத்தால், முழு அமைப்பும் இடிந்து விழும்.’என்ற சொற்றொடரை அவர் எப்போதும் பயன்படுத்தினார் .

    ஆனால் சோவியத் யூனியனின் பெரும்பாலான மக்களின் தேசபக்தி, வயது மற்றும் போரைத் தொடரும் அர்ப்பணிப்பையும் அவர் குறைத்து மதிப்பிட்டார்.

    7. சோவியத் பாதுகாப்புக்கு ஸ்டாலின் ஒரு தடையாக இருந்தார் என்று சொல்வது சரியானதா?

    சோவியத்

     

    கீவ் முற்றுகையில் இருந்து விலக அனுமதிக்கப்படாததால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். சண்டையிடுங்கள் அல்லது உயிரை விடுங்கள் என்பதான உத்தரவு இது. இந்த உத்தரவில் மாற்றத்திற்கு இடமில்லை.

    மாஸ்கோவை நோக்கி பின்வாங்கும் இறுதி கட்டங்களில் மட்டுமே ஸ்டாலின் சில தளர்வுகளை அளித்தார்.அவர் அவ்வாறு செய்தது பொருத்தமானதே. ஏனென்றால் நகரத்தை பாதுகாப்பதற்கு போதுமான வீரர்களின் உயிர்களை இதன்மூலம் காப்பாற்றமுடிந்தது..

    8. தாக்குதலின் ஆரம்ப கட்டங்களில் சோவியத் ஆட்சி கவிழும் ஆபத்து இருந்ததா?

    சோவியத் ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் ஒரு கிளர்ச்சி அல்லது அது போன்ற எதுவும் ஏற்படும் சாத்தியகூறு இருக்கவில்லை.

    உண்மையில், சோவியத் ஆட்சி குறித்து விமர்சனங்கள் எதுவும் இல்லை. ஏனென்றால் உண்மையில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அந்த நேரத்தில் மக்களின் கோபம் ஜெர்மனியின் மீதும், ஜெர்மன்-சோவியத் ஒப்பந்தம் தொடர்பான நம்பிக்கை துரோகம் மீதும் இருந்தது.

    சில சோவியத் தலைவர்கள் ஸ்டாலினை சந்திக்க அவர் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தனர். அப்போது ஸ்டாலின் மன அழுத்தத்தில் இருந்தார்.

    சோவியத் தலைவர்கள் அங்கு வருவதை ஸ்டாலின் பார்த்தபோது, ​​அவர்கள் தன்னை கைது செய்ய வந்ததாக நினைத்தார். ஆனால் அவர்கள் தன்னைப் போலவே அச்சத்தில் உள்ளார்கள் என்பதை அவர் விரைவில் புரிந்துகொண்டார். முன்னேறிச்செல்ல வேண்டும் என்று ஸ்டாலினுக்கு அந்தத்தலைவர்கள் நம்பிக்கை அளித்தனர்.

    9. ரஷ்யாவின் குளிர்காலம் மாஸ்கோ போரை தீர்மானிப்பதில் எந்த அளவிற்கு பங்கு வகித்தது?
    ஜெர்மனி நாட்டு ராணுவ வீரர்களுக்கு, ரஷ்யாவின் கடுங்குளிர் பெரும் பிரச்னையாக இருந்தது.

    ஜெர்மனி நாட்டு ராணுவ வீரர்களுக்கு, ரஷ்யாவின் கடுங்குளிர் பெரும் பிரச்னையாக இருந்தது.

    கடும் குளிர்காலம் மிகவும் முக்கிய பங்கு வகித்தது என்பதில் சந்தேகமில்லை.

    அந்த நேரத்தில் கடுங்குளிர் நிலவியது. சில நேரங்களில் தட்பநிலை மைனஸ் 40 டிகிரிக்கு குறைந்தது. ஜெர்மானியர்கள் இதற்குத் தயாராக இல்லை. அவர்களுடைய ஆயுதங்களும் ஆடைகளும் இந்த சூழலுக்கு ஏற்றவை அல்ல.

    உதாரணமாக, ஜெர்மன் இயந்திர துப்பாக்கிகள் பெரும்பாலும் உறைந்து போயின. அதைச் செயல்படுத்துவதற்கு படையினர் சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது.

    பன்செர் பீரங்கிகளின் தடங்கள் மிகவும் குறுகலானவை. எனவே அவை பனியில் சரியாக நகர முடியவில்லை. அதேசமயம் சோவியத் யூனியனிடம் டி -34 பீரங்கிகள் இருந்தன. இது அவர்களுக்கு ஒரு சாதக நிலையை கொடுத்தது.

    ரஷ்யாவின் கடுமையான குளிர்காலம் ஜெர்மனியின் துணிச்சலான காலாட்படையின் முன்னேற்றத்தின் வேகத்தை குறைத்தது. மழை காரணமான சேறு ஏற்கனவே ஜெர்மன் துருப்புக்களின் முன்னேற்றத்தை குறைத்துவிட்டது. இப்போது குளிரால் நிலைமை மேலும் மோசமானது.

    இரவில் விமானங்களின் இயந்திரங்களின் கீழ் தீ மூட்டி வைத்திருக்க வேண்டியிருந்தது. அப்படி செய்தால் மட்டுமே மறுநாள் அவைகள் வேலை செய்யும்.
    10. சோவியத் யூனியன் மீதான ஹிட்லரின் படையெடுப்பு அவரின் மிகப்பெரிய தவறா?

    நிச்சயமாக. முன்பிருந்த நிலையை தொடர்ந்து பராமரித்து, தான் வென்ற நாடுகளின் வளங்களைக் கொண்டு நாட்டின் ராணுவத்தை ஹிட்லர் பலப்படுத்தியிருந்தால், ஜெர்மனியின் நிலை மிகவும் வலுவாக இருந்திருக்கும்.

    1942 மற்றும் 1943 ஆம் ஆண்டுகளில் ஸ்டாலின் முதலில் தாக்குதல் நடத்தியிருந்தால், அது சோவியத் யூனியனுக்கு மிகவும் அழிவுகரமானதாக இருந்திருக்கும்.

    இது போரின் திருப்புமுனை என்பதில் சந்தேகமில்லை. கிழக்கு முன்னரங்கப்பகுதியில் ஜெர்மன் ராணுவம் 80 சதவிகித இழப்புகளை சந்தித்தது.

    ஆபரேஷன் பார்பரோசா தான் , ஜெர்மன் ராணுவத்தின் முதுகெலும்பை உடைத்தது என்பதில் சந்தேகமே இல்லை.

    Post Views: 618

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    கொடுபிடிகளுக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் (படங்கள்)

    May 18, 2022

    பிரேத ஊர்தியில் ஏறி தப்பிய 3 உறுப்பினர்கள்

    May 18, 2022

    டொலர் நெருக்கடியை தீர்க்க ரணில் அமைக்கும் வியூகம் வெற்றிபெறுமா?

    May 17, 2022

    Leave A Reply Cancel Reply

    March 2022
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Feb   Apr »
    Advertisement
    Latest News

    உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!

    May 21, 2022

    பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!

    May 21, 2022

    21 ஆவது திருத்தத்திற்கு தயாராகும் நீதி அமைச்சர்: பஸில் வீட்டுக்குப் போவார்!

    May 21, 2022

    லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதம்? – அமெரிக்கா மறுப்பு

    May 21, 2022

    RD (Restricted default) தரத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ள இலங்கை

    May 21, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!
    • பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!
    • 21 ஆவது திருத்தத்திற்கு தயாராகும் நீதி அமைச்சர்: பஸில் வீட்டுக்குப் போவார்!
    • லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதம்? – அமெரிக்கா மறுப்பு
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version