இந்தியாவிடமிருந்து வாங்கிய கடன்களுக்கு கைமாறாக நமது தமிழர் தாயக பிரதேசங்கள் இந்தியாவுக்கு தாரைவார்க்கப்படுகின்றன.
இது சம்பந்தமாக தமிழர் தரப்புகள் மௌனம் சாதிக்கிறார்கள்.
சீனா (நயினா தீவு, நெடுந்தீவு, அனலைத் தீவு) இத்தீவுகளில் தனது முதலீட்டை செய்ய முன்வந்த போது, எதோ சைனாகாரன் எங்கட பிரதேசங்களில் வந்து குடியேறப் போகிறான் என்பதுபோல் அழுதுகுளறிய தமிழர்கள் தற்போது பேசாமல் இருக்கிறார்கள்.
இனிவரும் காலங்களில் நமது தீவகம் அண்டிய பகுதிகளில் தமிழக மீனவர்கள் இலகுவாக வந்து மீன்பிடிக்கவும், தங்கிப்போகவும் இந்தியா மேற்கொள்ளும் இத்திட்டங்கள் இந்திய மீனவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தவிர, இந்திய கள்ளக்கடத்தல்காரர்கள் தீவக கடற்பரப்பை பயன்படுத்தி சுதந்திரமாக (கஞ்சா, போதைவஸ்து) கடத்தல் தொழில் செய்வதற்கும் இந்தியா முன்னெடுக்கும் இத்திட்டங்கள் இலகுவாக வழிவகுக்கும்.
நீண்டகாலமாக வடகிழக்கு மாகாணங்களை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்கின்ற இந்தியாவின் திட்டங்கள் படிப்படியாக , கட்டம்கட்டமாக நிறைவேற்றப்படுவருகின்றன.
சீனா ஒப்பந்தம் தட்டி பறிப்பு: இலங்கைக்கு 3 தீவுகளில் மின்உற்பத்தி நிலையம் கட்டி கொடுக்கிறது இந்தியா
யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் திட்டமிடப்பட்டிருந்த மின் திட்டப் பணிகளை இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசு வழங்கி அதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்று உள்ளார். இதில் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் மரபுசாரா மின் உற்பத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தியாவிடம் செய்யப்பட்டது.
இதற்கான ஒப்பந்தம் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் முன்னிலையில் கையெழுத்தானது.
யாழ்ப்பாணத்தில் உள்ள நயினா தீவு, நெடுந்தீவு, அனலைத் தீவு ஆகிய தீவுப்பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறைவேற்ற கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவை சேர்ந்த சினோசோர்- எடெக்வின் நிறுவனத்துக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்து இருந்தது.
தமிழகத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள இலங்கை தீவுகளில் சீன நிறுவனம் மின் உற்பத்தி பணியை தொடங்க அனுமதி அளிப்பது தமிழகத்தை ஒட்டிய பாக். வளைகுடா பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கும் என மத்திய அரசு அப்போதே தனது அதிருப்தியை இலங்கை அரசிடம் தெரிவித்தது.
இந்த நிலையில் மின் உற்பத்தி திட்டப் பணிகளை கடனுக்கு பதிலாக மானிய அடிப்படையில் நிறைவேற்றி தருவதாக இந்தியா இலங்கையிடம் தெரிவித்தது.
இதையடுத்து மின் திட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இலங்கை அரசு நிறுத்தி வைத்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்த இலங் கைக்கான சீன தூதர், இலங்கையின் இந்த நடவடிக்கை வெளிநாட்டு முதலீட்டை பாதிக்கும் என்றார்.