இணையத்தில் வைரலாகும் அரசு அதிகாரியின் கையெழுத்து… முள்ளம்பன்றி போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல்
அசாம் மாநிலம் கவுகாத்தியில் எலும்பியில் துறையில் பதிவராக இருக்கும் அதிகாரி ஒருவர் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். மார்ச் 4, 2022 அன்று இந்த கையெழுத்து போடப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு எலும்பியில் துறையில் பதிவராக இருக்கும் அதிகாரி ஒருவர் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். மார்ச் 4, 2022 அன்று இந்த கையெழுத்து போடப்பட்டுள்ளது.
முதலில் இதனை பார்ப்போருக்கு இது கையெழுத்துதானா அல்லது வேறு ஏதேனும் ஓவியமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவது போல் இருக்கிறது.
இதனை ரமேஷ் என்பவர் ட்விட்டரில் பதிவிட, நெட்டிசன்கள் அதனை அதிக எண்ணிக்கையில் ரீ ட்வீட் செய்து வருகின்றனர். நான் பல கையெழுத்துக்களை பார்த்துள்ளேன். ஆனால் இது பெஸ்ட் என்று ரமேஷ் பதிவிட்டுள்ளார்.
I have seen many signatures but this one is the best. pic.twitter.com/KQGruYxCEn
— Ramesh 🇮🇳 🚩 (@Ramesh_BJP) March 20, 2022
அதிகாரி கையெழுத்திற்கு பதிலாக முள்ளம்பன்றியை வரைந்துள்ளார் என்று இன்னொருவர் கமென்ட் செய்துள்ளார்.
I have seen many signatures but this one is the best. pic.twitter.com/KQGruYxCEn
— Ramesh 🇮🇳 🚩 (@Ramesh_BJP) March 20, 2022
அதிகாரியை மீண்டும் கையெழுத்து போட சொன்னால் அவரால் இதேபோன்று கையெழுத்து போட முடியாது. விலங்கின் படத்தை வரைந்திருக்கும் விலங்கு பிரியரான அதிகாரியின் பெயர் என்ன என்று இன்னொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Ask him to sign again & I am sure he will not be able match same number of loops. By the way what’s the name of this animal drawing lover.
— Deepak Bansal 🇮🇳 (@deepak_bansal11) March 21, 2022
this is another masterpiece edition! pic.twitter.com/nmmbzlVI8Z
— hคгi (@nineserene) March 20, 2022
இன்னொருவர் பறவை போன்று இருக்கும் அதிகாரியின் கையெழுத்தை பதிவிட்டு, இதைவிட சூப்பரான சிக்னேச்சர் எதுவும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
But Not better than this masterpiece pic.twitter.com/pxZb1hu6FH
— Basha (@reallivinghuman) March 21, 2022
கையெழுத்திட்ட அதிகாரியை யார் என்ற எதிர்பார்ப்பு நெட்டிசன்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.