விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்றிரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளையடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் நாமல் ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.