ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, March 23
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    அரசியல்

    ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட 4 பொலிஸார் கைது

    AdminBy AdminApril 29, 2022No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு  நடாத்த உத்தரவிட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே.பி. கீர்த்திரத்னவை சி.ஐ.டி.யினர் சற்றுமுன்னர் கைது செய்துள்ளனர்.

     

    கொழும்பில் வைத்து அவரைக் கைது செய்ததாக  சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண  தெரிவித்தார்.

    அத்துடன் துப்பாக்கிச் சூட்டினை நடாத்திய பொலிஸ் குழுவில் அங்கம் வகித்த  மூன்று கான்ஸ்டபிள்களையும், கண்டி – குண்டசாலை பகுதிக்கு சென்ற சி.ஐ.டி. சிறப்புக் குழுவினர் இன்று இரவு கைது செய்ததாக  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

    இந் நிலையில் கைதுசெய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மற்றும்  பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தொடர்பில்  நீதிமன்ற உத்தரவுக்கு அமைய  அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.

    குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  பொலிஸ் அத்தியட்சர் மொஹான் சிறிவர்தன தலைமையிலான குழுவினர்,  துப்பாக்கிச் சூட்டை நடாத்த கட்டளையிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரை கைது செய்திருந்ததுடன்,  பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக தலைமையிலான குழுவினர் ஏனைய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களைக் கைது செய்திருந்தனர்.

    நேற்று ( 27), துப்பாக்கிச் சூடு  நடாத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரியையும், அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ்  உத்தியோகத்தர்களையும் உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய கேகாலை நீதிவான் நீதிமன்றம்  வாசனா நவரட்ன பொலிஸ் மா அதிபருக்கு உத்தர்விட்டிருந்தார்.

    அந்த நீதிமன்ற உத்தரவு இன்று ( 28) பொலிஸ் மா அதிபருக்கு  கிடைத்ததாக வீரகேசரியிடம் கருத்து வெளியிட்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சர் நிஹால் தல்துவ, அந்த நீதிமன்ற உத்தரவை  உடனடியாக அமுல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவுக்கு ஆலோசனை வழங்கியதாக   கூறினார். இந் நிலையிலேயே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

    ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்தமை மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்த  பீ 2424/ 2022 எனும் இலக்கத்தை உடைய வழக்கு கேகாலை நீதிமன்றில் விசாரிக்கப்படுகிறது.

    கடந்த 19 ஆம் திகதி, எரிபொருள் கோரி ரம்புக்கனை பிரதேச மக்கள் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம், அன்றைய தினம் மாலை பொலிசாரால் பலப் பிரயோகம் செய்து கலைக்கப்பட்டது. இதன்போது கண்ணீர் புகை தாக்குதல், துப்பாக்கிச் சூடு ஆகியனவும் பதிவாகின.

    ரீ 56 ரக துப்பாக்கிகளைக் கொண்டு சுடப்பட்டிருந்தமை பின்னர் முன்னெடுத்த நீதிவான்  நீதிமன்ற பரிசோதனைகளின் போதான சாட்சிப் பதிவில் தெரியவந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டின் போது, 42 வயதான சாமிந்த லக்ஷான்  என்பவர் கொல்லப்பட்டிருந்தார்.

    குறுக்கு வீதி ஒன்றில் ஓடிக்கொண்டிருந்த போது, சாமிந்த லக்ஷான் மீது பின்னால் இருந்து சுடப்பட்டதாக நீதவான் விசாரணை நடைபெற்ற போது சாட்சியமளித்த ஒருவர் கூறியுள்ளார்.

    மரண பரிசோதனைகளிடையே சாட்சியமளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கீர்த்தி ரத்ன, தானே துப்பாக்கிச் சூட்டுக்கு  உத்தரவிட்டதாக ஒப்புக்கொண்டிருந்தார்.

    இவ்வாறான நிலையிலேயே,  இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த நபரின் மரணத்துக்கு  துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயமே காரணம் என  கேகாலை சட்ட வைத்திய அதிகாரியின்  அறிக்கை, சாட்சியம்  ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிவான் திறந்த மன்றில் அறிவித்திருந்தார்.

    அதன்படி இந்த மரணமானது சந்தேகத்துக்கு இடமானது என தீர்மானித்த நீதிவான் வாசனா நவரட்ன,  குறித்த துப்பாக்கிச் சூட்டினை நடாத்த உத்தரவிட்ட அதிகாரி, அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய  பொலிசாரை உடன் கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

    Post Views: 34

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    22ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைப்பு

    August 10, 2022

    MGR -ஐ பெயர் சொல்லி அழைப்பார்; ஆனால், ஜெயலலிதாவை…” – கருணாநிதி தனிச்செயலர் ராஜமாணிக்கம்

    August 8, 2022

    சஜித் அணியின் திட்டம் தவிடுபொடியானது!

    August 4, 2022

    Leave A Reply Cancel Reply

    April 2022
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்ததால் காதல் கணவரை குத்திக்கொன்ற இளம்பெண்

    March 23, 2023

    பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஆதித்த கரிகாலன் ஆனது எப்படி? படக்குழு வெளியிட்ட வீடியோ

    March 23, 2023

    நடிகை யாஷிகா ஆனந்தை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்

    March 23, 2023

    இன்றைய நாணயமாற்று விகிதம் – 23.03.2023

    March 23, 2023

    முத்த காட்சியா நோ… அழுது அடம் பிடித்த நடிகை ஷோபனா… கிளாசிக் ப்ளாஷ்பேக்

    March 23, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்ததால் காதல் கணவரை குத்திக்கொன்ற இளம்பெண்
    • பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஆதித்த கரிகாலன் ஆனது எப்படி? படக்குழு வெளியிட்ட வீடியோ
    • நடிகை யாஷிகா ஆனந்தை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்
    • இன்றைய நாணயமாற்று விகிதம் – 23.03.2023
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version