பிரதான வீதியின் கவரக்குளம் பகுதியில் இன்று(02) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
பலத்த காயமடைந்த தந்தை மற்றும் 11 வயதான மகன் ஆகியோர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த இவர்கள், பயணித்த முச்சக்கர வண்டி இன்று(02) அதிகாலை 5.29 மணியளவில் கவரக்குளம் பிரதேசத்திலுள்ள ஓடையொன்றிற்குள் குடைசாய்ந்துள்ளது.
முச்சக்கர வண்டி சாரதியின் தூக்க கலக்கமே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தில் 40 வயதான தாயும் 13 வயதான மகளுமே உயிரிழந்துள்ளனர்.