அநுராதபுரம் திரப்பனை பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேக நபர் 24 வயதுடைய இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக திரப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த நபர் அப்பகுதியில் உள்ள அரசுப் பாடசாலையில் உள்ள ஆசிரியர் அலுவலகத்தில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தன்னை பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த மாணவி தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது பாடசாலை முடிந்து செல்லும் நேரங்களில் இந்த துஷ்பிரயோக சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.