ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, May 29
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இலங்கை செய்திகள்

    இலங்கையில் உணவு தட்டுப்பாடு வருமா? – உச்சம் தொட்ட பொருட்களின் விலை

    AdminBy AdminJune 11, 2022No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இலங்கையில் எதிர்வரும் காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அண்மையில் தெரிவித்த கருத்தானது, நாட்டில் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

    அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கருத்து இன்று சமூகத்தில் வலுப் பெற்றுள்ளது.

    இதனால், மக்கள் இன்று அரிசி வகைகளை மொத்தமாக கொள்வனவு செய்து, தமது வீடுகளில் களஞ்சியப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது.

    அரிசி வகைகளின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில், மக்கள் அரிசி வகைகளை களஞ்சியப்படுத்தி வருகின்றனர்.

    இலங்கையில் பொருளாதார சிக்கல் தீவிரமடைந்துள்ள இந்த சூழ்நிலையில், பொருட்களுக்கான விலைகள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்கள் பல மடங்காக அதிகரித்துள்ளன.

    உலக நாடுகளே பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கவுள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சரை மேற்கோள்காட்டி, ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் 19ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

    இவ்வாறு உணவு தட்டுப்பாடு ஏற்படும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

    இதேவேளை, இலங்கையில் ரசாயன உர பயன்பாட்டிற்கு அரசாங்கம் கடந்த காலங்களில் தடை விதித்திருந்தமையினால், உள்நாட்டு விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

    இதன்படி, எதிர்வரும் போகத்தில் விவசாயத்தை உரிய முறையில் செய்வதற்கு தேவையான உரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

    இந்தியாவிடமிருந்து விசேட கடன் திட்டம்

    இதன் ஒரு கட்டமாக இந்தியாவிடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை இன்று (10) கைச்சாத்திட்டது.

    65,000 மெட்ரிக் டொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் கடன் வசதியை அரசாங்கம் கோரியிருந்தது.

    சிறுபோக பருவத்தில் யூரியா உர தேவையின் உடனடி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த கடன் வசதி கோரப்பட்டிருந்தது.

    இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து யூரியா உரம் கொள்முதல் செய்வதற்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர கடனை வழங்க இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

    விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்கும் விசேட திட்டமொன்றை ஆரம்பிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

    பொருட்களின் விலைகள் கடந்த ஓரிரு மாதங்களுக்குள் மேலும் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

    கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள விதத்தை பட்டியலில் காணலாம்.

    இந்த நிலையில், பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால், பலரும் மூன்று வேளை உணவை உட்கொள்ள முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.

    மேலும், சிலர் தாம் கொள்வனவு செய்யும் பொருட்களின் அளவை குறைத்துக்கொண்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

    அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?

    அரிசி உள்ளிட்ட உணவு வகைகளுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கூறிய போதிலும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவ்வாறான தட்டுப்பாடு வராது என உறுதியளித்துள்ளார்.

    நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமென்று எவரும் அச்சம் கொள்ள தேலையில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

    நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

    இந்த மாதத்தில் மேலும் 65,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

    அவ்வாறு சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில், மேலும் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

    இதனால், அத்தியாவசிய பொருட்களை தேவைக்கு அதிகமாக சேமிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.

    Post Views: 17

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    கிளிநொச்சியில் விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!!

    May 29, 2023

    வீட்டுக் கிணற்றில் விழுந்து சிறுமி மரணம்

    May 29, 2023

    எரிபொருள் கோட்டா அதிகரிப்பு

    May 28, 2023

    Leave A Reply Cancel Reply

    June 2022
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « May   Jul »
    Advertisement
    Latest News

    மஹிந்தவின் பிரதமர் கனவை கண்டுகொள்ளாத ரணில்

    May 29, 2023

    மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 04

    May 29, 2023

    கிளிநொச்சியில் விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!!

    May 29, 2023

    வீட்டுக் கிணற்றில் விழுந்து சிறுமி மரணம்

    May 29, 2023

    தையிட்டி விகாரைதான் கடைசியா?

    May 28, 2023
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • மஹிந்தவின் பிரதமர் கனவை கண்டுகொள்ளாத ரணில்
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 04
    • கிளிநொச்சியில் விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!!
    • வீட்டுக் கிணற்றில் விழுந்து சிறுமி மரணம்
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version