இலங்கைக்கு மருந்துப்பொருட்களை வழங்கியது மலேஷிய பௌத்த அமைப்புகள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய, மலேசியாவிலுள்ள பல பௌத்த அமைப்புகள் இலங்கைக்கு அவசர மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளன.
ஜூன் மாதம் 14 ஆம் திகதி அன்று சி ஹுய் டாங் – கோலாலம்பூரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கரீன் கியோங், மலேசியாவின் யயாசன் சின் செவ் & பெஸ்ட் விஷ்ஸ் அறக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சியூ நியோக் சோ மற்றும் பிஎல்ஐஏ & ஃபோ குவாங் ஷான் மலேசியாவின் தலைமை மடாதிபதி வென் ஜூ செங் ஆகியோர் 54046.26 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருந்துப் பொருட்களை மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் சுமங்கல டயஸிடம் கையளித்தனர்.
இந்தப் பொருட்கள் கடந்த 20 ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து இலங்கை்கு அனுப்பப்பட்டது.
இக் கையளிக்கும் நிகழ்வில் பிரதி உயர்ஸ்தானிகர் திருமதி. டிலானி வீரகோன் மற்றும் இரண்டாம் செயலாளர் (வர்த்தகம்) செல்வி. மேகலா அபேகோன் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.