காலி – மகுலுவ ரயில் கடவையில் பயணித்த காரொன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் கர்ப்பிணி தாயும் அவரது 7 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் சிக்கிய மேலும் 4 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிகழ்வொன்றுக்காக சென்றுக்கொண்டிருந்த வேளையிலேயே அவர்கள் பயணித்த கார் ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த கர்ப்பிணித்தாய் மற்றும் 7 வயது மகள் ஆகியோர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.