நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கூட்டரசங்கமாக செயற்பட இணங்கியுள்ள டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்ககும் என அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இதற்கான தீர்மானத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு இன்று கொழும்பு நுகேகொடை கட்சி செயலகத்தில், கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடி முடிவெடுத்தது.
இதேவேளை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கும் வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.