ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, February 5
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    உலகம்

    ரஷ்யா Vs யுக்ரேன்: போரை தொடர மேலும் 3 லட்சம் பேர் – விளாதிமிர் புதின்

    AdminBy AdminSeptember 21, 2022No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    யுக்ரேனில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைக்கு மேலும் 3,00,000 பேர் அழைக்கப்படுவார்கள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார்.

    தற்போது ராணுவத்தில் பணியாற்றவில்லை என்றாலும், ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் யுக்ரேனில் போரிட அழைக்கப்படுவார்கள் என்று அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.

    யுக்ரேனில் பணியாற்ற 3,00,000 பேர் அழைக்கப்படுவார்கள் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சாய்கூ ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

    இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு முதல் முறையாக ராணுவ அணி திரட்டலுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். மேலும், “அணு ஆயுத அச்சுறுத்தல்” என்ற பெயரில் ரஷ்யா மீது மேற்குலக நாடுகளின் மிரட்டல் தொடர்ந்தால், மாஸ்கோ அதன் பரந்த ஆயுதக் குவியலின் வலிமையுடன் பதிலளிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    யுக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு மேற்குலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், புதன்கிழமை அன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய விளாதிமிர் புதின், “எங்கள் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தப்பட்டால், எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்கு இருக்கும் அனைத்து வழிகளையும் நாங்கள் பயன்படுத்துவோம். இது வெற்றுப் பேச்சு அல்ல” என்று கூறியவர், ரஷ்யாவிடம் “பதிலளிக்க நிறைய ஆயுதங்கள் உள்ளதாக” தனது உரையின்போது தெரிவித்தார்.
    சிவப்புக் கோடு

    புதின் ஆற்றிய உரையின் முக்கிய தகவல்களை இப்போது பார்க்கலாம்

    யுக்ரேனில் ரஷ்யா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் ஒரு பகுதியளவு அணிதிரட்டலை புதின் அறிவித்துள்ளார்.

    இதன்படி, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் பணிக்கு அழைக்கப்படுவார்கள்.

    இந்த பகுதியளவு ராணுவ அணி திரட்டல் நடவடிக்கை இன்று முதல் தொடங்குகிறது.

    “தங்களின் ஆக்ரோஷமான ரஷ்ய-விரோதக் கொள்கையில், மேற்கு நாடுகள் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டன. நம் நாட்டிற்கும் நமது மக்களுக்கும் எதிராகத் தொடர்ந்து அச்சுறுத்தல்களைக் கேட்கிறோம்.

    சில பொறுப்பற்ற அரசியல்வாதிகள், யுக்ரேன், க்ரைமியா மற்றும் ரஷ்யாவின் பிற பிராந்தியங்களைத் தாக்க வழிவகை செய்யும் தொலைதூர ஆயுதங்கள், ஏவுகணை அமைப்புகளை வழங்குவது பற்றி மட்டும் பேசவில்லை.

    மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட இந்த பயங்கரவாதச் செயல்களின் மூலம் ஏற்கெனவே பெல்கோரோட் மற்றும் குர்ஸ்க் உள்ளிட்ட எல்லையோர பிராந்தியங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று விளாதிமிர் புதின் கூறியுள்ளார்.

    மேற்குலக நாடுகள் அணுசக்தியை வைத்து தங்களை மிரட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டிய புதின், அதுகுறித்து பேசும்போது, யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் அமைதி நிலவுவதை விரும்பவில்லை என்பதை மேற்குலக நாடுகள் காட்டியுள்ளதாக புதின் தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவை அழிப்பதே தங்களின் நோக்கம் என்பதை மேற்குலக நாடுகள் காட்டியுள்ளதாகவும் யுக்ரேன் மக்களை பீரங்கித் தீவனமாக மாற்ற அந்த நாடுகள் முயன்றதாகவும் புதின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    மேற்குலக நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்க ரஷ்யாவிடம் நிறைய ஆயுதங்கள் உள்ளதாகவும், தான் வெற்றுப் பேச்சு பேசவில்லை என்றும் கூறியுள்ளார்.

    டான்பஸில் உள்ள “எங்கள் மக்களை” பாதுகாக்க ரஷ்யா அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    முக்கியமாக, ரஷ்யாவின் ஆயுத உற்பத்தியை அதிகரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.முன்னதாக, தற்போது தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரேனிய பகுதிகளில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற ரஷ்யாவின் அறிவிப்புக்கு மேற்குலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    லூஹான்ஸ்க், டான்டேஸ்க், சேர்சன் மற்றும் சாப்பரீஷா உள்ளிட்டவற்றின் நிர்வாகங்கள் வரும் வெள்ளிக்கிழமை தேர்தல் துவங்கும் என்று அறிவித்துள்ளன.

    இத்தகைய போலியான தேர்தல்களை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் என்று அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

    Post Views: 107

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

    February 5, 2023

    ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய ஜோடிக்கு 10 வருட சிறை

    February 2, 2023

    கட்டுக்கட்டாக ஊழியர்களுக்கு போனஸ் கொடுத்த நிறுவனம்

    February 1, 2023

    Leave A Reply Cancel Reply

    September 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    கண்டி இராச்சிய இறுதி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனுக்கு இந்தியாவில் நினைவேந்தல்.

    February 5, 2023

    பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

    February 5, 2023

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • கண்டி இராச்சிய இறுதி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனுக்கு இந்தியாவில் நினைவேந்தல்.
    • பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version