பாகிஸ்தானைச் சேர்ந்த சௌகத் என்பவர் தனது 4 மனைவிகளின் சம்மதத்துடனும் 5 ஆவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சௌகத்தின் 5ஆவது திருமணத்திற்கு முன்னர் அவரது எட்டு மகள்களுக்கும், 1 மகனுக்கும் திருமணமாகியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 67 வயதான சௌகத்துக்கு தற்போது, 10 குழந்தைகள், 40 பேரக்குழந்தைகள் உள்ளனர் எனவும் ,அவரது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 62 ஆக உள்ளது எனவும், அவர் அனைவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.