ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, February 5
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    கேரள நரபலி: `மனித இறைச்சிக்கு அதிக பணம்’ – ஃபிரிட்ஜில் பாதுகாக்கப்பட்ட துண்டுகளாக்கப்பட்ட உடல்

    AdminBy AdminOctober 17, 2022No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மனித இறைச்சி வாங்க பெங்களூரில் இருந்து ஒரு வியாபாரி வருவதாக ஷாஃபி கூறியுள்ளர். அதற்காக நரபலி கொடுத்த உடலை துண்டாக்கி ஃபிரிட்ஜில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    கேரள மாநிலத்தில் இரண்டு பெண்களை நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த முஹம்மது ஷாஃபி, பத்தனம்திட்டா இலந்தூரைச் சேர்ந்த பாரம்பர்ய வைத்தியர் பகவல்சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இப்போது மூவரும் போலீஸ் காவலில் உள்ளனர். இரட்டை நரபலி நடந்த பகவல் சிங்கின் வீட்டில் மூவரையும் அழைத்துச் சென்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது பகவல் சிங் வீட்டிலும், ஃப்ரிட்ஜிலும் ரத்தக்கறைகள் இருந்தது கண்டறியப்பட்டன. மனித இறைச்சி சமைத்த பாத்திரங்களும், உடலை வெட்ட பயன்படுத்திய மூன்று கத்திகள், ஒரு வெட்டுகத்தி, மரக்கட்டை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இரண்டு மோப்பநாய்கள் மூலம் வீடும், வீட்டைச்சுற்றியுள்ள வளாகமும் சோதிக்கப்பட்டது. தடவியல் நிபுணர்களும் வீட்டில் தடயங்களை சேகரித்தனர்.


    நரபலி கொடுக்கப்பட்ட வீட்டு வளாகத்தில் மோப்பாய் சோதனை

    மேலும் பெண் உருவம் போன்ற டம்மி உடல் ஒன்றை பகவல் சிங்கின் வீட்டுக்கு கொண்டு சென்று நரபலி கொடுத்தது எப்படி என்பதை லைவாக செய்யவைத்து மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    ஃப்ரிட்ஜில் ரத்தம் எப்படி வந்தது என லைலாவிடம் கேட்டதற்கு, நரபலி கொடுத்ததில் சுமார் 10 கிலோ இறைச்சியை பிரிட்ஜில் இரண்டு நாள்களாக வைத்திருந்தாக அவர் கூறியுள்ளார்.

    சமைத்த மனித இறைச்சியை சாப்பிட பகவல் சிங் மறுத்திருக்கிறார். இதனால், லைலா அவரது வாயில் இறைச்சியை திணித்துள்ளார். ஆனால், பகவல்சிங் இறைச்சியை துப்பிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் முஹம்மது ஷாஃபியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஷாஃபி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, “ஸ்ரீதேவி என்ற போலி ஃபேஸ்புக் ஐ.டி மூலம் பகவல் சிங்கிடம் பெண் போன்று பழகியுள்ளார் ஷாஃபி.

    அது பெண்தானா என்பதை கண்டறிய மெசேஞ்சரில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்படி பகவல் சிங் கூறியுள்ளார்.

    கிரிமினலாக யோசித்த ஷாஃபி எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பேச வைத்து மெசேஞ்சர் மூலம் சில வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.


    லைலா, பகவல் சிங்

    முதலில் செல்வம் பெருக என சாதாரண பூஜைகளை செய்து நடித்துள்ளார் முஹம்மது ஷாஃபி. அப்போது சிறிது சிறிதாக பகவல்சிங் தம்பதியிடம் இருந்து ஆறு லட்சம் ரூபாய் வரை ஷாஃபி வாங்கியுள்ளார்.

    அந்த பணத்தை திரும்ப கேட்டபோது, இவர்களை கொலை வழக்கில் சேர்த்துக்கொண்டால் ஏற்கனவே வாங்கிய பணத்தை கேட்கமாட்டார்கள்,

    மிரட்டி கூடுதல் பணம் பறிக்கலாம் என ஷாஃபி திட்டமிட்டிருக்கிறார். அதற்காகத்தான் நரபலி பூஜை என்ற ஐடியாவை சொல்லியிருக்கிறார்.

    நரபலி கொடுத்தால் பலன் கிடைக்குமா என ஸ்ரீதேவி ஃபேஸ்புக் ஐ.டி-யிடம் சந்தேகம் கேட்டுள்ளார்.

    நான் அப்படி பூஜை செய்து பலன் கிடைத்தது என ஸ்ரீதேவி ஃபேஸ்புக் ஐடி-யில் இருந்து பதில் வந்துள்ளது. அதை நம்பி நரபலிக்கு தயாராகியுள்ளார் பகவல் சிங்.

    நரபலி கொடுக்கப்பட்ட ரோஸ்லி, பத்மா

    Post Views: 95

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023

    Leave A Reply Cancel Reply

    October 2022
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

    February 5, 2023

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023

    “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்

    February 4, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    • அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version