ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, February 7
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    ஒரே நபரை, ஒரே மேடையில் திருமணம் செய்துகொண்ட இரட்டை சகோதரிகள்

    AdminBy AdminDecember 4, 2022No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள அக்லுஜ் எனும் பகுதியில் இரட்டை சகோதரிகள் ஒரே நபரை, ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

    மும்பையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ரிங்கி பாட்கோன்கர் மற்றும் பிங்கி பாட்கோன்கர். இவர்கள் ஐ.டி. துறையில் பணியாற்றும் பொறியாளர்கள்.

    இவர்கள் மும்பையில் டிராவல்ஸ் தொழில் செய்துவரும் அதுல் ஆவதாடே என்பவரை டிசம்பர் 2ஆம் தேதி திருமணம் செய்துள்ளனர்.

    பிங்கி மற்றும் ரிங்கி ஆகியோர் அவர்கள் தாயுடன் வசித்து வந்தனர். ஒருமுறை பிங்கி, ரிங்கி மற்றும் அவர்களின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது அதுல் நடத்தும் நிறுவனத்தின் கார்கள் மூலம் மருத்துவமனைக்குச் சென்று வந்துள்ளனர்.

    அப்போது உண்டான பழக்கம் நெருக்கமான உறவாக மாறி, இப்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

     

    சமூக ஊடகங்களில் இந்தத் திருமண நிகழ்வின் படங்களும் காணொளிகளும் வைரலாகி வரும் நிலையில், இந்தத் திருமணம் சட்டப்படி செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இது குறித்து அறிய அக்லுஜ் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி அருண் சுகாவ்கரை பிபிசி மராத்தி தொடர்பு கொண்டது.

    இரட்டை சகோதரிகள் இருவருமே ஒரே நபரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சிறு வயது முதலே முடிவு செய்தனர். இவர்களின் முடிவுக்கு இவர்கள் குடும்பமும் ஒப்புதல் அளித்தது என்று அவர் தெரிவித்தார்.

    திருமணம் நடந்த கலான்டே ஹோட்டலின் உரிமையாளர் நானா கலான்டேவை பிபிசி மராத்தி தொடர்பு கொண்டது.

    ”திருமணம் குறித்து நான் அந்தப் பெண்களிடம் பேசினேன். தாங்கள் படித்தவர்கள் என்றும் தங்கள் சுயவிருப்பத்தின் பெயரிலேயே இந்தத் திருமணத்தைச் செய்துகொள்வதாகவும் அவர்கள் கூறினர். இருவரும் ஒப்புக்கொண்டுதான் திருமணம் செய்கிறார்கள் என்று தெரிந்தபின்னரே எனது இடத்தில் திருமணம் நடத்த அனுமதித்தேன். அவர்கள் விவரங்கள், அடையாள அட்டைகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டேன்,” என்று அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் இந்தத் திருமணம் நடந்ததற்கு எதிராக இளைஞர் ஒருவர் அக்லுஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    ”இது குறித்து விசாரித்து வருகிறோம். அதன் பின்னரே நடவடிக்கை குறித்து கூற முடியும்,” என்று காவல் அதிகாரி அருண் சுகாவ்கர் தெரிவித்தார்.

    சட்டம் என்ன சொல்கிறது?
    ஒரே நபரை திருமணம் செய்துகொண்ட இரட்டை சகோதரிகள்

    இந்திய சட்டப்படி முதல் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கும்போது, அவரை விவாகரத்து செய்யாமல், இன்னொரு நபரைத் திருமணம் செய்யக்கூடாது.

    அதையும் மீறி திருமணம் செய்தால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.

    இப்படி சட்டத்துக்கு புறம்பான திருமணம் செய்தவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கலாம் என்று இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 494 கூறுகிறது.

    முன்னதாக பிபிசி மராத்தி வழக்கறிஞர் அசிம் சரோதேவுடன் பேசியது. ”இந்தியாவில் இருதார மணத்துக்கு எதிராக சட்டம் உள்ளது.

    ஆனால், இருவர் ஒரே நபருடன், ஒரே நேரத்தில் மண உறவில் இருக்க ஒப்புக்கொண்டு வாழ்ந்தால் அது குற்றமாகாது.

    ஒருவருடன்தான் வாழ்வோம் என்று இருவருமே சொன்னால், அதற்கு மற்றவர்கள் என்ன செய்ய முடியும்,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    Post Views: 102

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    `இறங்கும் அதானி, ஏறும் அம்பானி’… உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் நுழைந்தார் அம்பானி!

    February 6, 2023

    மருமக பொண்ணுக்கு 500 கிலோ மாலை.. தாய்மாமன் சீருன்னா சும்மாவா.. அசர வைக்கும் வீடியோ..!

    February 6, 2023

    Leave A Reply Cancel Reply

    December 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Nov   Jan »
    Advertisement
    Latest News

    ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!

    February 7, 2023

    பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!

    February 7, 2023

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!

    February 6, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!
    • பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!
    • தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்
    • சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version