மாளிகாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை பகுதியில் இரும்புக் குழாயால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிசர மற்றும் கொழும்பு 14 பிரதேசங்களைச் சேர்ந்த 34 வயது மற்றும் 44 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (07) கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையில் மேலும் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் 18, 22, 27 மற்றும் 31 வயதுடைய தெமட்டகொடை மற்றும் மருதானை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.