ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, March 30
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Flash News Fed 001

    புட்டீன் மீண்டும் விடுக்கும் அணுக்குண்டு மிரட்டல்

    AdminBy AdminJanuary 29, 2023No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ஐரோப்பாவில் போர் நடந்தால் அமெரிக்கா கல்லாக் கட்டும் என்பது வரலாற்று உண்மை. மேற்கு நாடுகள் உக்ரேனுக்கு வலிமை மிக்க போர்த்தாங்கிகளை வழங்கியுள்ளன.

    ஆனால் அவை சிறப்பாக செயற்படுவதற்கு சிறந்த வான் படை ஆதரவு அவசியம். அதனால் அமெரிக்காவின் உயர்தொழில்நுட்பப் படைக்கல உற்பத்தி நிறுவனமான லொக்கீட் மார்ட்டீன் தனது F-16 போர்விமானங்களை எந்த நாடாவது வழங்க முன் வந்தால் அந்த நாட்டுக்கு தாம் விநியோகிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

    உக்ரேனின் அடுத்த முயற்ச்சி F-16ஐப் பெற்றுக் கொள்வது.

    உக்ரேன் போர் விமானிகளுக்கு பயிற்ச்சி வழங்குவதை அமெரிக்க நாடாளுமன்றம் 2022 ஓகஸ்ட்டில் அனுமதி வழங்கியதுடன் அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்திருந்தது.

    புட்டீனின் சினத்தை தவிர்க்கும் முகமாகவும் உக்ரேன் போர் உக்கிரமடைவதை விரும்பாமையாலும் உக்ரேனுக்கு F-16 போர்விமானங்களை வழங்குவதை அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் நிறுத்தி வைத்தார்.

    F-16 போர்விமானங்கள் இல்லாமலே உக்ரேனியர்களால் போரில் தாக்குப் பிடிக்க முடியும் என அமெரிக்கா இதுவரை கருதியிருந்தது.

    இரசியா தனது படைக்கு மேலும் இரண்டு இலட்சம் பேரை சேர்க்கவிருப்பதால் உக்ரேனியர்கள் பெருமளவு உயிரிழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் உக்ரேன் இப்போது F-16 போர்விமானங்களை பெற்றுக் கொள்வதில் விருப்பம் கொண்டுள்ளது.

    உலகில் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு அதிக போர்முனைகளைக் கண்ட போர் விமான்ங்களில் F-16 போர்விமானங்கள் முன்னிலை வகிக்கின்றது. நான்காம் தலைமுறைப் போர்விமானமான F-16 எதிரியின் வான், தரை, கடல் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க வல்லது.

    இரசியாவின் எச்சரிக்கை

    இரசிய நாடாளுமன்றமான டூவாவின் தலைவர் உக்ரேனுக்கு அமைதியான இரசிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடிய வலிமை மிக்க படைக்கலன்களை வழங்கும் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தமக்கான அழிவை தாமே தேடிக் கொளின்றன. அதிக வலிமை மிக்க படைக்கலன்களால் அந்த நாடுகள் தாக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

    தன்னைத் தானே கூராக்கும் யூரேனியம்

    யூரெனியம் உலகிலேயே மிகவும் அடர்த்தி கூடிய உலோகமாகும். அதனால் அது துப்பாக்கிச் சன்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

    யூரேனியத்தால் உருவாக்கப்பட்ட சன்னம் இன்னும் ஒரு உலோகத்தின் மீது மோதும் போது அது தன்னை மேலும் கூர்மையாக்கிக் கொண்டு மோதப்படும் உலோகத்தை இலகுவாகப் பிளக்கும்.

    இதை self-sharpening என்பர். ஒரு தாங்கியை அல்லது காப்பரணை (Bunker) யூரேனியத்தால் செய்யப்பட்ட குண்டு தாக்கும் போது அது தன்னைக் கூர்மையாக்கிக் கொள்வதுடன் கதிர் வீச்சையும் உமிழ்கின்றது.

    அணுக்குண்டு உற்பத்திக்கு யூரேனியத்தைப் பதப்படுத்தும் போது அருகிய யூரேனியமும் (Depleted Uranium) பெறப்படுகின்றது.

    அருகிய யூரேனியம் பதப்படுத்தப்பட்ட யூரேனியத்திலும் பார்க்க கதிர்வீச்சு மிகவும் குறைந்தது.

    அதனால் அமெரிக்கா அருகிய யூரேனியமும் (Depleted Uranium) பாவித்து துப்பாக்கி குண்டுகள் மற்றும் தாங்கிகளில் இருந்து வீசப்படும் குண்டுகளை உருவாக்கியது. அவை Uranium core armour-piercing” cells என அழைக்கப்படும்.

    Uranium core armour-piercing” cells

    போர்த்தாங்கிகளில் “Uranium core armour-piercing” cells பாவிக்கப்படுவதுண்டு. அவை எதிரிகளில் வலிமை மிக்க காப்பரண்களையும் தாங்கிகளையும் அழிக்க வல்லன.

    இவற்றை “Silver Bullet” என்றும் “Dirty Bomb” என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவற்றில் பாவிக்கப்படும் யூரேனியம் அணுக்குண்டுகளில் பாவிக்கப்படும் பதப்படுத்தப்பட்ட யூரேனியத்தைப் போல் பேரழிவு விளைவிக்கக் கூடிய கதிர் வீச்சைக் கொண்டவை அல்ல.

    1991இல் வளைகுடாப் போரிலும், 1992இல் பொஸ்னியா போரிலும் அமெரிக்கா அமெரிக்கா Uranium core armour-piercing” cellsகளைப் பாவித்தது.. வளைகுடாப் போரிலும் பொஸ்னியாப் போரிலும் Uranium core armour-piercing” cells பாவிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப் பட்டனர்.

    இதனால் அமெரிக்கா அந்தக் குண்டுகளின் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக 2015இல் சொன்னது.

    ஆனால் அதே ஆண்டில் சிரியாவில் அமெரிக்கா அக்குண்டுகளைப் பாவித்தது. எதிரியின் மிகக் கடினமான கவசங்களை அழிப்பதறிகு இக்குண்டுகள் பொருத்தமானவையாக இருப்பதால் அக்குண்டுகளை அமெரிக்கா இன்னும் இரகசியமாக வைத்திருக்கலாம்.

    உக்ரேனுக்கு வழக்கப்படும் தாங்கிகளில் யூரேனியம் குண்டுகள்

    யூரேனியம் குண்டுகளை ஜேர்மனியின் லெப்பேர்ட்-2 போர்த்தாங்கிகள், அமெரிக்காவின் Bradly போர்வண்டிகள் அமெரிக்காவின் Marder போர்வண்டிகள் ஆகியவை Uranium core armour-piercing” cellsகளை வீசக் கூடியவை.

    இரசியப் படையினர் மீதோ அல்லது படை நிலகள் மீதோ வீசப்பட்டால் அது அணுக்குண்டுப் போருக்கு ஒப்பானதாகும் என இரசியா எச்சரித்துள்ளது.

    இதனால் உக்ரேனில் அருகிய யூரேனியத்தால் உருவாக்கப்பட்ட Uranium core armour-piercing” cellsகளை பாவிக்கப்பட்டால் இரசியா அணுக்குண்டுகளை பாவிக்கத் தயங்காது எனப் பொருள்படுகின்றது.

    ஐரோப்பவின் பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பிடம் (Organisation for Security and Cooperation in Europe) இரசியா இதை தெளிவு படக் கூறியுள்ளது.

     

    Post Views: 14

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    சீன மொழியை தொடர்ந்து இலங்கையில் அதிகரிக்கும் இந்தி மொழி பயன்பாடு

    March 28, 2023

    சர்வதேச நாணய நிதிய கடன் தீர்வல்ல

    March 28, 2023

    ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு

    March 27, 2023

    Leave A Reply Cancel Reply

    January 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Dec   Feb »
    Advertisement
    Latest News

    திருக்கடையூர் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகர் செந்தில்

    March 30, 2023

    விகாரை, புத்தர் சிலை: நெடுந்தீவில் எதிர்ப்பு போராட்டம்.

    March 30, 2023

    உயிர்த்தஞாயிறு தாக்குதல் – சாரா ஜஸ்மின் உயிரிழந்துள்ளார்- மரபணுபரிசோதனை மூலம் உறுதி

    March 30, 2023

    செத்து செத்து விளையாடலாமா…! மரணம் எப்படி இருக்கும்…! அனுபவம் வழங்கும் புதிய தொழில்நுட்பம்

    March 30, 2023

    இலங்கையின் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உடைப்பு – அரசாங்கம் என்ன சொல்கிறது?

    March 29, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • திருக்கடையூர் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகர் செந்தில்
    • விகாரை, புத்தர் சிலை: நெடுந்தீவில் எதிர்ப்பு போராட்டம்.
    • உயிர்த்தஞாயிறு தாக்குதல் – சாரா ஜஸ்மின் உயிரிழந்துள்ளார்- மரபணுபரிசோதனை மூலம் உறுதி
    • செத்து செத்து விளையாடலாமா…! மரணம் எப்படி இருக்கும்…! அனுபவம் வழங்கும் புதிய தொழில்நுட்பம்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version