ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, March 30
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Flash News Fed 001

    கன்னியாகுமரியில் பாலியல் சீண்டலை தட்டிக் கேட்ட பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்த விஷமிகள் – மூவர் கைது

    AdminBy AdminMarch 10, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

    குமரி மாவட்டம் மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் கலா (35). கணவரை இழந்த இவர் தனது 9 வயது மகளுடன் வசித்து வருகிறார். மார்த்தாண்டம் பகுதியில் ஒரு மசாஜ் சென்டரையும் கலா நடத்தி வருகிறார்.

    வீட்டில் தனிமையில் இருப்பதால் மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய கலா, தனது மகளை காப்பகத்தில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில், தான் நடத்தி வரும் மசாஜ் சென்டருக்கு கலா மேல்புறம் வழியாக செல்லும் போது அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தினசரி கலாவை பாலியல் சீண்டல் செய்வதாகவும் அவதூறாகவும் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் பயந்து போன கலா தனது பாதுகாப்பிற்காக மிளகாய்ப்பொடியும் கத்தியையும் கைவசம் வைத்திருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் வியாழக்கிழமை வழக்கம் போல் கலா தனது மசாஜ் சென்டருக்கு செல்வதற்காக மேல்புறம் பகுதிக்கு வந்தபோது அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர், கலாவை பார்த்து கிண்டல் செய்தபடி அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளதாக தெரிகிறது.

    பெண்ணை மின்கம்பத்தில் கட்டி போட்டு சித்திரவதை

    இதையடுத்து கலா தன் கைவசம் வைத்திருந்த மிளகாய்ப்பொடியை எடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மீது எறிந்து விட்டு தன்னை காப்பாற்றிக் கொள்ள முயன்றுள்ளார்.

    அப்போது அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்களில் சிலர் கலாவை பலவந்தமாக பிடித்து அவரது கை, கால்களை துணியால் கட்டி மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கலா தெரிவித்துள்ளார்.

    கலா ஒரு மணி நேரத்திற்கு மேல் மின் கம்பத்திலேயே கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அருமனை போலீசார் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கலாவை மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து போலீசாரிடம் கலா தெரிவித்துள்ளார். இதையடுத்து பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தியதாக மேல்புறம் பகுதியை சேர்ந்த சசி, வினோத், திபின் , விஜயகாந்த், அரவிந்த் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் சசி, வினோத், விஜயகாந்த் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் திபின் மற்றும் அரவிந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

     

    Post Views: 59

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    என்னடா நடக்குது இங்க..! நடுரோட்டில் காதல் ஜோடியின் செயலை கண்டு திகைத்துப்போன மக்கள்

    March 29, 2023

    கொல்லம் தேவி கோவில் திருவிழாவில் பெண்களை போல் வண்ண, வண்ண உடை அணிந்து சாமி தரிசனம் செய்த ஆண்கள்

    March 29, 2023

    சீன மொழியை தொடர்ந்து இலங்கையில் அதிகரிக்கும் இந்தி மொழி பயன்பாடு

    March 28, 2023

    Leave A Reply Cancel Reply

    March 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Feb    
    Advertisement
    Latest News

    திருக்கடையூர் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகர் செந்தில்

    March 30, 2023

    விகாரை, புத்தர் சிலை: நெடுந்தீவில் எதிர்ப்பு போராட்டம்.

    March 30, 2023

    உயிர்த்தஞாயிறு தாக்குதல் – சாரா ஜஸ்மின் உயிரிழந்துள்ளார்- மரபணுபரிசோதனை மூலம் உறுதி

    March 30, 2023

    செத்து செத்து விளையாடலாமா…! மரணம் எப்படி இருக்கும்…! அனுபவம் வழங்கும் புதிய தொழில்நுட்பம்

    March 30, 2023

    இலங்கையின் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உடைப்பு – அரசாங்கம் என்ன சொல்கிறது?

    March 29, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • திருக்கடையூர் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகர் செந்தில்
    • விகாரை, புத்தர் சிலை: நெடுந்தீவில் எதிர்ப்பு போராட்டம்.
    • உயிர்த்தஞாயிறு தாக்குதல் – சாரா ஜஸ்மின் உயிரிழந்துள்ளார்- மரபணுபரிசோதனை மூலம் உறுதி
    • செத்து செத்து விளையாடலாமா…! மரணம் எப்படி இருக்கும்…! அனுபவம் வழங்கும் புதிய தொழில்நுட்பம்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version