ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, June 1
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    AdminBy AdminMarch 27, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    புதுச்சேரியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் செந்தில்குமரன் வெடிகுண்டு வீசியும் கத்தியால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

    புதுச்சேரி மாநிலம் மங்கலம் தொகுதியின் பாஜக பொறுப்பாளராக இருந்தவர் 45 வயதாகும் செந்தில்குமரன்.

    இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். கட்சிப் பணிகள் தவிர, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களைச் செய்து வரும் இவர், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர்.

    இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வில்லியனூரில் உள்ள கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள தனது நண்பரின் பேக்கரியுடன் கூடிய தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 6-7 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு இரண்டை வீசியது. அதில் நிலைகுலைந்த செந்தில்குமரனை தங்களிடமிருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    உடனடியாக அங்கு திரண்ட 100க்கும் மேற்பட்ட செந்தில்குமரனின் ஆதரவாளர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமெனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்து பார்வையிட்ட நமச்சிவாயம் செந்தில்குமரனின் உடலைப் பார்த்து அழுதார்.

     

    அதற்குப் பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் செந்தில் குமரனை முன்விரோதம் காரணமாக வில்லியனூரைச் சேர்ந்த ரவுடி நித்தியானந்தம் தனது ஆதரவாளர்களை மூன்று இருசக்கர வாகனங்களில் அனுப்பி கொலை செய்ததாக சந்தேகிக்கின்றனர்.

    அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, செந்தில்குமரன் படுகொலை செய்யப்படும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன. குற்றவாளிகளைக் கைதுசெய்ய ஏ.டி.ஜி.பி. ஆனந்தகுமார் தலைமையில் இரண்டு தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

    இந்த நிலையில், செந்தில்குமரன் கொலை தொடர்பாக ஏழு பேர் திருச்சி நீதிமன்றம் எண் 3இல், நீதிபதி பாலாஜி முன்பாக சரணடைந்தனர்.

    நித்தியானந்தம் முதல் குற்றவாளியாகவும் சிவசங்கர், ராஜா, வெங்கடேஷ், பிரதாப், கார்த்திகேயன், விக்னேஷ் ஆகியோர் கூட்டாளிகளாகவும் சரணடைந்துள்ளனர்.

    இந்தக் கொலையில் சரணைடந்துள்ள நித்யானந்தம், கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த இளைஞர் ஒருவரின் கொலை வழக்கில் தற்போது வரை தேடப்பட்டுவந்தார்.

    கொல்லப்பட்ட செந்தில்குமரன், நமச்சிவாயம் காங்கிரசில் இருந்தபோது, அவரும் காங்கிரசில் இருந்தார். நமச்சிவாயம் பா.ஜ.கவுக்கு வந்த சில நாட்களுக்குப் பின் இவரும் பா.ஜ.கவில் இணைந்தார்.

    செந்தில் குமரன் – நித்யானந்தம் மோதலின் பின்னணி

    தற்போது இந்தக் கொலை வழக்கில் சரணடைந்திருக்கும் நித்யானந்தம், முன்பு செந்தில்குமரனுடன் நெருக்கமாகவே இருந்து வந்திருக்கிறார்.

    இருவரும் இணைந்தே ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றைச் செய்து வந்துள்ளனர். செந்தில்குமரன் கூறும் வழக்குகளில் நித்யானந்தம் சரணடைவதும் நடந்துள்ளது.

    இந்த நிலையில், தான் சில வழக்குகளில் தேவையில்லாமால் சிக்க வைக்கப்படுவதாக உணர்ந்த நித்யானந்தம், பிறகு செந்தில்குமரனிடம் இருந்து பிரிந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

    சில கஞ்சா வழக்குகளும் நித்யானந்தம் மீது தொடரப்பட்டிருக்கின்றன. இதில் ஆத்திரமடைந்த நித்யானந்தம் செந்தில்குமரனை கொல்ல முடிவுசெய்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

     

    Post Views: 88

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய காதலியை சாலையோரம் வீசி சென்ற காதலன்

    June 1, 2023

    திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் ‘மதுபாட்டில்’ கொடுத்த மணமகள் வீட்டார்

    June 1, 2023

    மின்மயானத்தில் சடலத்தின் மீது அமர்ந்து பூஜை நடத்திய அகோரி.. கோவையை உறைய வைத்த பகீர் சம்பவம்

    May 31, 2023

    Leave A Reply Cancel Reply

    March 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Feb   Apr »
    Advertisement
    Latest News

    மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 05

    June 1, 2023

    விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய காதலியை சாலையோரம் வீசி சென்ற காதலன்

    June 1, 2023

    திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் ‘மதுபாட்டில்’ கொடுத்த மணமகள் வீட்டார்

    June 1, 2023

    அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

    June 1, 2023

    இலங்கை ரூபாய்க்கு விரைவில் கஷ்டகாலம் ஆய்வாளர்கள் கணிப்பு?

    June 1, 2023
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 05
    • விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய காதலியை சாலையோரம் வீசி சென்ற காதலன்
    • திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் ‘மதுபாட்டில்’ கொடுத்த மணமகள் வீட்டார்
    • அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version