ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Friday, June 2
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    செய்திகள்

    அ.தி.மு.க. பொதுக் குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

    AdminBy AdminMarch 28, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அ.இ.அ.தி.மு.க. பொதுக் குழு தீர்மானங்களையும் பொதுச் செயலாளர் தேர்தலையும் எதிர்த்துத் தொடரப்பட்ட ஏழு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு உடனடியாக மேல் முறையீடு செய்திருக்கிறது

    கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக் குழுக் கூட்டங்கள் செல்லாது அறிவிக்கக்கோரி, ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அத்தனையையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    அ.இ.அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரைத் தேர்வுசெய்வதற்காந தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறுமென மார்ச் 17ஆம் தேதியன்று எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 18ஆம் தேதி துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனுக்களைத் தாக்கல்செய்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான பி. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் சார்பாக மொத்தம் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தலாம் எனவும் முடிவுகளை அறிவிக்கக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் மார்ச் 22ஆம் தேதி வாத – பிரதிவாதங்கள் முடிவடைந்தன. இதற்குப் பிறகு இரு தரப்பும் எழுத்து மூலமாக தங்கள் வாதங்களைத் தாக்கல்செய்தன. இதற்குப் பிறகு, நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பொதுக் குழு தீர்மானங்களை எதிர்த்தும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடைகோரியும் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

     

    இதனால், எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு அறிவித்த பொதுச் செயலாளர் தேர்தலின் முடிவை அறிவிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது.

    மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதும் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பின் சார்பில், மேல் முறையீடு செய்வதாகவும் அதனை உடனடியாக விசாரிக்க வேண்டுமென்றும் அவரது தரப்பு மூத்த வழக்கறிஞர் சி. மணி சங்கரும் அப்துல் சலீமும் கோரினர்.

    இதையடுத்து இந்த மேல் முறையீட்டை நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது சஃபீக் அடங்கிய அமர்வு விசாரிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து வி.கே. சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தொடர்ந்த பிரதானமான உரிமையியல் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

    Post Views: 59

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    அமெரிக்காவில் அதிசயம்: 4 ஆண்டுகளாக அப்படியே இருக்கும் கன்னியாஸ்திரி உடல்

    May 31, 2023

    சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய இராணுவ சிப்பாய்க்கு கடூழிய சிறை

    May 28, 2023

    மன்னாரில் கோர விபத்து: ஓட்டோ சாரதி மரணம்

    May 23, 2023

    Leave A Reply Cancel Reply

    March 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Feb   Apr »
    Advertisement
    Latest News

    மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 05

    June 1, 2023

    விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய காதலியை சாலையோரம் வீசி சென்ற காதலன்

    June 1, 2023

    திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் ‘மதுபாட்டில்’ கொடுத்த மணமகள் வீட்டார்

    June 1, 2023

    அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

    June 1, 2023

    இலங்கை ரூபாய்க்கு விரைவில் கஷ்டகாலம் ஆய்வாளர்கள் கணிப்பு?

    June 1, 2023
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 05
    • விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய காதலியை சாலையோரம் வீசி சென்ற காதலன்
    • திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் ‘மதுபாட்டில்’ கொடுத்த மணமகள் வீட்டார்
    • அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version