“ஆந்திராவில் மது அருந்த பணம் தராத தாய்க்கு பயத்தைக் காட்ட அவரது மகன் மின் கம்பத்தில் ஏறி படுத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மன்யம் மாவட்டத்தின் பார்வதிபுரம் நகரில் சிங்கிபுரம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மது அருந்துவதற்காக தனது அம்மாவின் ஓய்வூதிய பணத்தை கேட்டு அவரது மகன் தொந்தரவு செய்துள்ளார்.

ஆனால் அம்மா பணம் தர மறுத்ததால் அவரை பயமுறுத்த மின் கம்பத்தில் இளைஞர் எறியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக மின்சார சப்ளையை நிறுத்தி அவரின் உயிரைக் காப்பாற்றினர். பின்னர் சிறுதிநேரம் கழித்து அவர் கீழே இறங்கி வந்துள்ளார்.

Share.
Leave A Reply