ஹமாஸ் அமைப்பு மூன்று பணயக்கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்துள்ளது.

ரோமிகோனேன்,டோரன் ஸ்டெய்ன் பிரெச்சர்,எமிலி டமரி ஆகிய மூன்று பெண் பணயக்கைதிகiளே ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.

இவர்களை 2003ம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்திருந்தது.

காசா நகரின் அல்சரயா சந்தியில் இவர்களை ஒப்படைக்கும் நிகழ்வு இடம்பெற்றவேளை பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர்.

ஹமாஸ் மூன்று பணயக்கைதிகளை ஒப்படைத்துள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது.

இறுதியாக கிடைத்த தகவல்களின்படி இவர்களை செஞ்சிலுவை சங்கம் இஸ்ரேலிய இராணுவத்திடம் கையளித்துள்ளது.அவர்கள் இஸ்ரேலிற்குள் வந்துள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அவர்கள் தங்கள் தாய்மார்களுடன் சேர்க்கப்படுவார்கள்,தென் இஸ்ரேலில் அவர்களை ஆரம்பகட்ட மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் இஸ்ரேலிய தலைநகருக்கு மருத்துவபரிசோதனைக்காக கொண்டு செல்வோம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply