இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை பய­ணத்தின் போது, கையெ­ழுத்­தி­டப்­பட்ட பாது­காப்பு ஒத்­து­ழைப்பு உடன்­பாட்டின் வெளிப்­ப­டை­யின்மை கடு­மை­யான விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்த உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்டு மூன்று வாரங்­க­ளுக்கு மேல் ஆகி­விட்ட நிலையில், அதன் உள்­ள­டக்கம் இன்­னமும் மர்­ம­மா­கவே இருந்து வரு­கி­றது.

இந்தப் பாது­காப்பு ஒத்­து­ழைப்பு உடன்­பாட்டில் என்­னென்ன விட­யங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன என்­பது பற்­றிய, எந்­த­வொரு அதி­கா­ரப்­பூர்வ தக­வ­லையும் இந்­தி­யாவோ இலங்­கையோ வெளி­யி­ட­வில்லை.

இந்­தியப் பிர­தமர் நாடு திரும்­பி­யதும், கடந்த 8ஆம், 9ஆம், 10ஆம் திக­தி­களில் இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற அமர்­வு­களில், ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க இந்த உடன்­பாடு குறித்து விளக்­க­ம­ளிப்பார் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால், அவ்­வா­றான ஒரு விளக்­கத்தை ஜனா­தி­பதி அளிக்­க­வில்லை. அது­போல, இந்­தி­யா­வுடன் செய்து கொள்­ளப்­பட்ட உடன்­பாடு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டவும் இல்லை.

கடந்த காலங்­களில், ஜே.வி.பி .அல்­லது தேசிய மக்கள் சக்தி எதிர்க்­கட்­சியில் இருந்­த­போது, இந்­தி­யா­வுடன் அமெ­ரிக்­கா­வுடன் ஏற்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்ட இணக்­கப்­பா­டுகள் தொடர்­பாக, அர­சாங்­கங்கள் வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் செயற்­ப­ட­வில்லை என்றும், உடன்­பாட்டு நகலை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கு­மாறும் வலி­யு­றுத்தி போராட்­டங்­களை மேற்­கொண்­டது.

ஆனால், இப்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் இந்­தி­யா­வுடன் செய்து கொண்ட உடன்­பாட்டை பாரா­ளு­மன்­றத்­திலோ அல்­லது பகி­ரங்­க­மா­கவோ முன்­வைக்கத் தயா­ராக இல்லை.

கடந்த வாரம் அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில், அமைச்­ச­ரவை பேச்­சாளர் நளிந்த ஜய­திஸ்­ஸ­விடம் இது­பற்றிக் கேள்வி எழுப்­பப்­பட்ட போது, இந்த உடன்­பாட்டை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைப்­ப­தற்கு இந்­தி­யாவின் இணக்­கப்­பாடு தேவை எனக் கூறி­யி­ருந்தார்.

அப்­ப­டி­யானால், இது ஓர் இர­க­சிய உடன்­பாடு என்றே கருத வேண்டும்.

இரண்டு நாடு­க­ளுக்கும் இடையே இதனை இர­க­சி­ய­மாக பேணு­வது என்று ஒரு உடன்­பாடு எட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்­தி­யா­வுடன் இர­க­சி­ய­மான ஒரு உடன்­பாட்­டிற்குச் செல்­கிறோம் எனத் தெரிந்து கொண்டே, இலங்கை அர­சாங்கம் அதில் கையெ­ழுத்­திட்­டி­ருக்­கி­றது.

இப்­போ­தைக்கு பாரா­ளு­மன்­றத்தில் இந்த உடன்­பாட்டை சமர்ப்­பிக்க முடி­யாது என்றும், தகவல் உரிமைச் சட்­டத்தின் கீழ் வேண்­டு­மானால் அதன் முக்­கிய விட­யங்­களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ கூறி­யி­ருந்தார்.

பாது­காப்பு அமைச்­சிடம் தகவல் உரிமைச் சட்­டத்தின் கீழ் இது­பற்றி தகவல் கோரினால் அதன் பதில் என்­ன­வாக இருக்கும் என்­பதை, பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.

இவ்­வா­றான சூழலில், இந்­தி­யா­வுடன் செய்து கொள்­ளப்­பட்­டுள்ள, இந்த பாது­காப்பு உடன்­பாடு, இலங்­கைக்கு சாத­க­மா­னதா இந்­தி­யா­வுக்கு சாத­க­மா­னதா என்ற விவா­தங்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­தியா பிராந்­திய அதி­காரப் போட்­டியில் தனக்கு சார்­பாக நாடு­களை இணைத்துக் கொள்ளும் முயற்­சியில் இறங்கி இருக்­கி­றது.

குறிப்­பாக இந்­திய பெருங்­கடல் பிராந்­தி­யத்தில் உள்ள நாடு­க­ளுடன் அது நெருக்­கத்தை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது.

அதன் ஒரு கட்­ட­மா­கவே, இலங்­கை­யுடன் பாது­காப்பு ஒத்­து­ழைப்பு உடன்­பாடும் செய்து கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த உடன்­பாடு, ஏற்­கெ­னவே நடை­மு­றையில் இருந்த பாது­காப்பு தொடர்­பான ஒத்­து­ழைப்­புக்­களை ஆவ­ணப்­ப­டுத்தி இருக்­கி­றதே தவிர, புதி­தாக எதுவும் சேர்க்­கப்­ப­ட­வில்லை என இலங்கை அர­சாங்கம் கூறி­யி­ருந்­தது.

அப்­ப­டி­யானால் ஏன் அதனை அர­சாங்கம் இர­க­சி­ய­மாக மறைத்து வைக்க வேண்டும்?

இந்த உடன்­பாட்டில், பாது­காப்பு தள­பாட உற்­பத்­திகள் மற்றும் ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்­து­வது பற்­றிய விட­யங்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டுள்­ளது.

அது எந்­த­ள­விற்கு ஆழ­மா­னது என்­பது இன்­னமும் விடை தெரி­யாத புதி­ரா­கவே இருந்­தாலும், இந்த விடயம் சாதா­ர­ண­மான ஒன்­றாக இருக்­காது.

நெருக்­க­டி­யான சூழ்­நி­லை­களின் போது இலங்­கையில் இந்­தியா, பாது­காப்பு தள­பா­டங்­களை சேமித்து வைக்­கவும் இந்த உடன்­பாட்டில் இணக்­கப்­பாடு ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக சில தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இந்­தி­யாவின் பாது­காப்பு தள­பாட உற்­பத்தி மற்றும் ஏற்­று­மதி என்­பன வளர்ந்து வரும் ஒரு கைத்­தொ­ழி­லாக மாறி இருக்­கி­றது.

கூடுதல் பாது­காப்பு தள­பா­டங்­களை அடுத்த ஐந்து ஆண்­டு­களில் ஏற்­று­மதி செய்­வ­தற்கு இந்­தியா திட்­ட­மிட்­டி­ருக்­கி­றது.

அவற்றில் போர்க்­கப்­பல்கள், போர் விமா­னங்கள், இலகு ஹெலி­கொப்­டர்கள் மாத்­தி­ர­மன்றி அதி­ந­வீன ஏவு­க­ணை­களும் உள்­ள­டங்­கி­யி­ருக்­கின்­றன.

பிலிப்பைன்ஸ் உள்­ளிட்ட பல நாடுகள் இந்­தி­யாவின் அதி­ந­வீன ஏவு­க­ணை­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு ஒப்­பந்­தங்­களை செய்­தி­ருக்­கின்­றன.

இலங்­கையும் கூட இந்­தி­யா­விடம் இருந்து ஆழ்­கடல் ரோந்து கப்­பல்­களை பெற்­றி­ருக்­கி­றது. டோனியர் கண்­கா­ணிப்பு விமா­னங்­க­ளையும் இந்­தியா வழங்கி இருக்­கி­றது.

இவற்றில் பெரும்­பா­லா­னவை இந்­தி­யா­வினால் கொடை­யாக வழங்­கப்­பட்­டவை.

ஆனால், நீண்­ட­கா­லத்­திற்கு இந்­தியா இவற்றை கொடை­யாக வழங்கிக் கொண்­டி­ருக்க முடி­யாது.

இலங்கை தனது பாது­காப்பை வலுப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு விரும்­பினால் இந்­தி­யா­விடம் இருந்து பாது­காப்பு தள­பா­டங்­களை வாங்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­படும்.

இதற்கு இந்த இரு­த­ரப்பு பாது­காப்பு ஒத்­து­ழைப்பு உடன்­ப­டிக்கை வழி­வகுக்கும் என தெரி­கி­றது.

இலங்கை விமா­னப்­ப­டையில் இருந்த எவ்-7, மிக், கிபிர் ரக போர் விமா­னங்­களில் பயன்­ப­டுத்தும் காலம் காலா­வ­தி­யாகக் கொண்­டி­ருந்த நிலையில், பாகிஸ்­தா­னிடம் இருந்து ஜே.எவ்- 17 போர் விமா­னங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் முயற்­சித்­தது.

நல்­லாட்சி அரசின் காலத்தில், இந்­தியா அதனை தடுத்து நிறுத்­தி­யது.

அதற்குப் பதி­லாக இந்­திய தயா­ரிப்­பான தேஜஸ் போர் விமா­னங்­களை இலங்கை விமா­னப்­படை கொள்­வ­னவு செய்ய வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தி­யது.

இந்­தி­யாவின் தேஜஸ் போர் விமா­னங்­களை கொள்­வ­னவு செய்ய நல்­லாட்சி அர­சாங்­கமோ, விமா­னப்­படை அதி­கா­ரி­களோ விரும்­ப­வில்லை.

கோட்­டா­பய ராஜபக் ஷ பத­விக்கு வந்த பின்னர், இந்­திய விமா­னங்­களை கொள்­வ­னவு செய்­வதை விரும்­பாமல், 50 மில்­லியன் டொலர் செலவில், இஸ்­ரேலில் ஏழு கிபிர் போர் விமா­னங்­களை முழு­மை­யாக மறு­சீ­ர­மைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்தார்.

இதன் மூலம் தேஜஸ் போர் விமா­னங்­களை, இலங்­கையின் தலையில் கட்டி விடும் முயற்­சி­க­ளுக்­கான கதவு அடைக்­கப்­பட்­டது.

ஆனால், தற்­போது பாது­காப்பு ஒத்­து­ழைப்பு உடன்­பாடு செய்­யப்­பட்­டுள்ள நிலையில், இந்­தி­யாவின் பாது­காப்பு தள­பா­டங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு இலங்கை முன்­னு­ரிமை கொடுக்க வேண்­டிய நிலை ஏற்­படக் கூடும்.

அதே­வேளை, இலங்­கையின் கடற்­ப­ரப்பில் சீனாவின் ஆய்வு கப்­பல்கள் தரித்துச் செல்­வ­தற்கும், ஆய்­வு­களை முன்­னெ­டுப்­ப­தற்கும் தடை­வி­திப்­பது தொடர்­பான விட­யங்­களும், இந்த பாது­காப்பு ஒத்­து­ழைப்பு உடன்­பாட்டில் இடம்­பெற்­றி­ருப்­ப­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

அதனை உறு­திப்­ப­டுத்­து­கின்ற எந்த ஒரு ஆவ­ணங்­களும் வெளி­வ­ர­வில்லை.

இந்தச் சூழலில் இந்­திய ஊட­கங்கள் அண்­மையில் ஒரு தக­வலை வெளி­யிட்டு பர­ப­ரப்பை கிளப்­பி­யி­ருந்­தன.

இந்­திய பிர­த­மரின் இலங்கை பய­ணத்­துக்கு முன்­ன­தாக – திரு­கோ­ண­ம­லையில் பாகிஸ்தான் கடற்­ப­டை­யுடன் கூட்டுப் பயிற்சி நடத்த இலங்கை கடற்­படை திட்­ட­மிட்­டி­ருந்­தது என்றும், புது­டெல்­லி­யினால் வெளி­யி­டப்­பட்ட எதிர்ப்பை அடுத்து அது கைவி­டப்­பட்­டது என்றும் இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டன.

இலங்­கையின் பாது­காப்பு அமைச்சும் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூத­ர­கமும் இதனை நிரா­க­ரித்­தி­ருக்­கின்­றன.

மார்ச் 6 ஆம் திகதி பாகிஸ்தான் போர்க்­கப்பல் ஒன்று கொழும்­புக்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்­தது.

அந்த போர்க்­கப்பல் இலங்கை கடற்­ப­டை­யுடன் திட்­ட­மிட்ட வழித்­துணை பயிற்­சியை முன்­னெ­டுத்த படி மறுநாள் நாட்டை விட்டு வெளி­யே­றி­யி­ருந்­தது.

அது தவிர வேறு எந்த திட்ட மிடல்களும் இருந்திருக்கவில்லை என்றும், கூட்டுப் பயிற்சி எதுவும் இரத்து செய்யப்படவில்லை என்றும் இரண்டு நாடுகளும் கூறி இருக்கின்றன.

பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னரே, பாகிஸ்தானுடன் இணைந்து கூட்டு பயிற்சிகள், ஒத்துழைப்புக்களை முன்னெடுப்பதை இந்தியா தடுக்கக் கூடிய அளவிற்கு செல்வாக்கு பெற்று விட்டது என்ற தோற்றப்பாட்டை உருவாக்கும் நோக்கிலேயே, அந்த செய்திகள் வெளியிடப்பட்டதாக கருதப்படுகிறது.

ஆனால், இந்த விவகாரத்துக்கு பின்னால் இந்தியாவின் இன்னொரு மறைமுகச் செய்தி இருக்கிறது.

இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ள நிலையில், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள், இலங்கை கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளை முன்னெடுப்பதை, இந்தியா கவலையுடன் நோக்கும் என்பதே அது.

இந்தியாவின் இந்தச் செய்தியை கொழும்பு புரிந்து கொண்டிருக்கும். இதனை ஒரு மறைமுக அழுத்தமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஹரி­கரன்

Share.
Leave A Reply