முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல்வெளி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (07) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

43 வயதுடைய 8ஆம் வட்டாரம் மந்துவில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அருமைநாயகம் யசோதரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் கொண்டுவரப்பட்ட நிலையில், அங்கு புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share.
Leave A Reply