இந்­தியா, பாகிஸ்தான் இடையில் தீவி­ர­ம­டைந்­து­வரும் மோதல் உலகின் பல்­வேறு நாடு­களின் இரா­ணு­வங்­களின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. ஐரோப்பா மற்றும் சீனா­வில்­ தயா­ரிக்­கப்­பட்ட போர் விமா­னங்கள், ஆயு­தங்­களும் இந்த மோதல்­களில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதே இதற்குக் காரணம்.

காஷ்­மீரின் பஹல்­காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி சுற்­றுலா பய­ணிகள் 26 பேர் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்தின் தொடர்ச்­சி­யாக இந்­தியா, பாகிஸ்தான் இடை­யி­லான மோதல்கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

இச்­சம்­ப­வத்­தை­டுத்து கட­ந்த 7 ஆம் திகதி அதி­காலை பாகிஸ்தான் கட்­டுப்­பாட்­டி­லுள்ள காஷ்மீர் மற்றும் பாகிஸ்­தானின் பஞ்சாப் மாகா­ணத்தின் மீது இந்­தியா ‘ஒப­ரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் ஏவு­கணைத் தாக்­கு­தல்­களை நடத்­தி­யது. இதில் 26 பேர் கொல்­லப்­பட்­ட­துடன் 46 பேர் காய­ம­டைந்­தனர் என பாகிஸ்தான் தெரி­வித்­தது.

மே 8 ஆம் திகதி இந்­தி­யாவின் பஞ்சாப் மற்றும் காஷ்மீர் பகு­தி­களில் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவு­கணைத் தாக்­கு­தல்­களை நடத்­தி­யது. அதற்கு எதி­ராக இந்­தியா பதில் தாக்­கு­தல்­களை நடத்­தி­யது.

பாகிஸ்­தானின் தாக்­கு­தல்­களால் 16 பொது­மக்கள் உயி­ரி­ழந்­தனர் என இந்­தியா தெரி­வித்­துள்­ளது.

அதன்பின் தொடர்ச்­சி­யாக மோதல்கள் இடம்­பெற்று வரு­கின்­றன

ஆயுதப் பரீட்சைக் களம்

இதே­வேளை, வெளி­நா­டு­களில் தயா­ரிக்­கப்­பட்ட போர் விமா­னங்கள், ஏவு­க­ணை­களின் பரீட்சைக் கள­மா­கவும் இந்­திய, பாகிஸ்தான் மோதல்­களம் கரு­தப்­ப­டு­கி­றது. இதனால் இம்­மோதல் களம் பல நாடு­களின் இரா­ணுவ நிபு­ணர்­களின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

பல்­வேறு நாடு­களும் அதி உயர் தாக்­குதல் திறன் கொண்ட நவீன போர் விமா­னங்­களைத் தயா­ரிப்­பதில் பெரு­ம­ளவு முத­லீ­டு­களைச் செய்­கின்­றன. வேறு பல நாடுகள் அவற்றின் ஆற்­றல்கள் குறித்து தெரி­விக்­கப்­படும் தக­வல்­களின் அடிப்­ப­டையில் அவ்­வி­மா­னங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு ஆர்வம் காட்­டு­கின்­றன.

ஆனால், சோத­னைகள் மற்றும் பயிற்சி நட­வ­டிக்­கை­க­ளுக்கு அப்பால், உண்­மை­யான போர்க்­க­ளத்தில் இவ்­வி­மா­னங்­களை பயன்­ப­டுத்­து­வ­தற்கு வாய்ப்பு கிடைப்­பது அரி­தாகும்.

போர்க்­க­ளங்­களில் இத்­த­கைய போர் விமா­னங்­களின் திறன்கள், பல­வீ­னங்கள், விமா­னி­களின் செயற்­பா­டுகள், அவ்­வி­மா­னங்­க­ளி­லி­ருந்து இயக்­கப்­படும் வானி­லி­ருந்து வானை நோக்­கிய ஏவு­க­ணைகள் போன்­றவை தொடர்­பான அறிந்­து­கொண்டு தமது சொந்தப் படை­களை ஆகாய மோதல்­க­ளுக்குத் தயார்­ப­டுத்­து­வதில் உண்­மை­யான விமான மோதல்கள் பல நாடு­க­ளுக்கு உதவும்.

இவ்­வ­கையில் இந்­தியா, பாகிஸ்தான் இடை­யி­லான தற்­போ­தைய மோதலும் இத்­த­கைய தக­வல்­களை அறி­வ­தற்­கான வாய்ப்பை வழங்கும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

பிரெஞ்சு தயா­ரிப்­பான ரஃபேல் ரக போர் விமா­னங்­களை இந்­தியா கொண்­டுள்­ள­து. அதே­வேளை சீனத் தயா­ரிப்­பான ஜே10 ரக போர் விமா­னங்­களை பாகிஸ்தான் கொண்­டுள்­ள­து.

இந்­திய போர் விமா­னங்கள் மீது ஏவு­க­ணை­களை ஏவு­வ­தற்கு சீனத் தயா­ரிப்­பான ஜே10 ரக விமா­னங்­களை பாகிஸ்தான் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­தாக நம்­பப்­ப­டு­வ­தாக தன்னை இனங்­காட்ட விரும்­பாத அமெ­ரிக்க அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்­ளா­ரென செய்­திகள் வெளி­யா­கின.

போர்த் தள­பா­டங்­களின் தயா­ரிப்­புகள், தொழில்­நுட்­பங்கள், தந்­தி­ரோ­பா­யங்கள், எந்த பொருட்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அவற்றில் எவை செயற்­ப­டு­கின்­றன, எவை செயற்­ப­ட­வில்லை என்­பன போன்ற தக­வல்­களை முடிந்­த­ளவு அறி­வ­தற்கு அமெ­ரிக்கா, சீனா, ஐரோப்­பிய நாடு­க­ளி­லுள்ள போர்த்­த­ள­பாட நிபு­ணர்கள் மிகவும் ஆர்­வ­மா­க­வுள்­ள­னர் என லண்­டனை தள­மாகக் கொண்ட மூலோ­பாயக் கற்­கை­க­ளுக்­கான நிறு­வ­கத்தின் இரா­ணுவ வானியல் துறையைச் சேர்ந்த டக்ளஸ் பாரீ கூறி­யுள்ளார்.

சீனாவின் பி.எல். 15 ரக வானி­லி­ருந்து வான் நோக்­கிய ஏவு­கணை மற்றும் ஐரோப்­பிய தயா­ரிப்­பான, ரேடாரின் வழித்­து­ணை­யுடன் இயங்கும் Meteor ரக ஏவு­க­ணை­களின் திறன்­களை அறி­வ­தற்­கான கள­மா­கவும் இந்­திய – – –பாகிஸ்தான் மோதல் களம் கரு­தப்­ப­டு­கி­றது.

“பிஎல் 15 ஒரு பெரும் பிரச்­சினை. அது குறித்து அமெ­ரிக்க இரா­ணுவம் மிகுந்த கவனம் செலுத்தும்” என அமெ­ரிக்க பாது­காப்பு தொழிற்­துறை அதி­காரி ஒருவர் கூறி­யுள்ளார்.

Chinese Fighter Jets

ரஷ்ய – உக்ரேன் போரிலும், தமது ஆயு­தங்கள் எவ்­வாறு செயற்­ப­டு­கின்­றன என்­பது குறித்து அமெ­ரிக்க ஆயுதத் தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் தொடர்ந்து தக­வல்­களை பெற்று வரு­வ­தாக வொஷிங்­டனைத் தள­மாகக் கொண்ட பாது­காப்பு நிபுணர் பிறையன் கலோன் கூறு­கிறார்.

இதே போன்று இந்­தி­யாவின் ஐரோப்­பிய ஆயுத விநி­யோ­கத்­தர்­களும் செய்­யக்­கூடும் என தான் எதிர்­பார்ப்­ப­தா­கவும், அதே­வேளை பாகிஸ்­தானும் சீனாவும் இதே போன்ற தக­வல்­களை பரி­மா­றிக்­கொள்­ளக்­கூடும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

ரஃபேல் விமா­னத்­துடன், சுகோய் சூ -30 மற்றும் மிக் 29 ரக விமா­னங்­க­ளையும் தான் சுட்டு வீழ்த்­தி­ய­தாக பாகிஸ்தான் தெரி­வித்­துள்­ளது. சுகோய் சூ -30, மிக் 29 விமா­னங்கள் ரஷ்ய தயா­ரிப்­புகள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­தி­ய விமா­னங்கள் சுட்­டு­வீழ்த்­தப்­பட்­டதாக இந்­தியா உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இது குறித்து இந்­தியா இது குறித்து கருத்துத் தெரி­விக்­க­வில்லை. எனினும், வான்­க­ல­மொன்றின் எரி­பொருள் தாங்­கியின் சிதை­வுகள் என இந்­தி­யாவின் ஸ்ரீந­க­ருக்கு அருகில் வீழ்ந்து கிடந்­தன.

ஆனால் இந்­திய விமா­னப்­ப­டையின் விமா­னத்தை பி.எல்.15ஈ ரக ஏவு­கணை பொருத்­தப்­பட்ட ஜே-10சி ரக விமா­னங்கள் சுட்டு வீழ்த்­தி­ய­தாக பாகிஸ்­தானின் துணைப் பிர­த­மரும் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரு­மான இஷாக் தார் கூறி­யுள்ளார்

இந்­நி­லையில், ஜே10சி ரக போர் விமா­னங்­களைத் தயா­ரிக்கும், சீனாவின் ‘ஏவிக் செங்டு எயார்­கிராவ்ட்’ நிறு­வ­னத்தின் பங்­கு­களின் விலைகள் கடந்த சில தினங்­களில் 40 சத­வீ­தத்­தினால் அதி­க­ரித்­தி­ருந்­தன.

ஆனால், சீனத் தயா­ரிப்பு விமா­னங்கள் இம்­மோ­தல்­களில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது குறித்து, சீன வெளி­வி­வகா அமைச்சு பேச்­சா­ள­ரிடம் கடந்த வியா­ழக்­கி­ழமை செய்­தி­யா­ளர்கள் கேட்­ட­போது, தனக்கு அம்­மோதல் நிலை­வரம் தொடர்­பாக பரீட்­ச­ய­மில்லை என பதி­ல­ளித்­தி­ருந்தார்.

1979 ஆம் ஆண்டின் முற்­ப­கு­தியில் நடந்த சீன- வியட்நாம் யுத்­தத்தின் பின்னர், கடந்த 4 தசாப்­தங்­க­ளாக பாரிய யுத்தம் எதிலும் சீனா ஈடு­ப­ட­வில்லை. ஆனால், ஜனா­தி­பதி ஸீ ஜின்­பிங்கின் தலை­மையில் கீழ் அது தனது ஆயு­தப்­ப­டை­களை நவீன மயப்­ப­டுத்தி வரு­கி­றது. நவீன ஆயு­தங்கள், தொழில்­நுட்­பங்­க­ளுக்­காக பெரு­ம­ளவு வளங்­களை பயன்­ப­டுத்­து­கி­றது.

கடந்த 5 வரு­டங்­களில் பாகிஸ்தான் இறக்­கு­மதி செய்த ஆயு­தங்­களில் 81 சத­வீ­த­மா­ன­வற்றை சீனாவே விநி­யோ­கித்­துள்­ள­தாக சுவீ­ட­னி­லுள்ள ஸ்டொக்ஹோம் சர்­வ­தேச அமைதி ஆராய்ச்சி நிறு­வ­னத்தின் தர­வுகள் தெரி­விக்­கின்­றன. போர் விமா­னங்கள், ஏவு­க­ணைகள், ரேடர்கள், வான் பாது­காப்புப் பொறி­மு­றகைள் ஆகி­ய­னவும் மேற்­படி விநி­யோ­கங்­களில் அடங்கும்.

எஸ்-400 எனும் வான் பாது­காப்பு பொறி­மு­றை

சீனத் தொழில்­நுட்­பத்­துடன் சீனா­வுடன் இணைந்தும் பாகிஸ்தான் ஆயு­தங்­களை தயா­ரித்து வரு­கி­றது. மறு­புறும் இந்­தி­யாவும் சுய­மாக போர் விமா­னங்­களைத் தயா­ரித்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. ரஷ்­யா­விடம் இருந்து அதி­ந­வீன எஸ்-400 எனும் வான் பாது­காப்பு பொறி­மு­றை­யையும் இந்­தியா பயன்­ப­டுத்­து­கி­றது.

சீனாவின் பி.எல்.-15 ரக ஏவு­க­ணையின் வீச்­செல்லை, தரம் தொடர்­பாக அறிந்­து­கொள்­வதில் மேற்­கு­லகம் நீண்­ட­கா­ல­மாக ஆர்வம் செலுத்தி வரு­கின்­றன. ஐரோப்­பாவின் Meteor ஏவு­க­ணை­யை­விட பி.எல். 5 தரம் வாய்ந்­ததா என்ற கேள்­வியும் உள்­ளது.

சீனா முதல் தட­வை­யாக 2011 ஆம் ஆண்டு பி.எல்.15 ஏவு­க­ணையை பரீட்­சித்­தது. இதில் பல வகைகள் உள்­ளன. சீனப் படை­யி­ன­ருக்­காக தயா­ரிக்­கப்­பட்ட பி.எல்.15 ஏவு­கணை 200 முதல் 300 கிலோ­மீற்றர் வீச்­செல்லைக் கொண்­டது என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­வ­தற்­காக தயா­ரிக்­கப்­பட்ட பி.எல்.15ஈ ரக ஏவு­கணை குறைந்த வீச்செல்லையை (அதிகபட்சம் 145 கிலோமீற்றர்) கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chinese PL-15E air-to-air missiles

ரஃபேல் உட்பட இந்தியாவின் போர் விமானங்களை சுட்டுவீழ்த்துவதற்கு பி.எல்.15 ஏவுகணைகளை பயன்படுத்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ள நிலையில், மே 9 ஆம் திகதி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹோஷியார்பூரில் பி.எல்.-15 என நம்பப்படும் ஏவுகணையொன்று, வெடிக்காத நிலையில் ஏறத்தாழ முழுமையாக வீழ்ந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான, வீடியோக்களும் இந்திய ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இதேவேளை அமெரிக்கத் தரப்பில், பி.எல்.15 ஏவுகணைகளுக்குப் போட்டியாக, லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துக்கு ஊடாக AIM-260 எனும் அதிநவீன ஏவுகணையை தயாரித்துள்ளது. அமெரிக்க விமானப்படைக்கான அதிநவீன போர் விமானம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை போயிங் நிறுவனத்துக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்.­ சே­து­ரா­மன்-

Share.
Leave A Reply