இந்­தியா- பாகிஸ்தான் இடையில் தொடங்­கிய போர், திடீ­ரென அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்பின் தலை­யீட்­டினால் இடை­ நி­றுத்­தப்­பட்­டது.

பெரும் போராக மாறிக் கொண்­டி­ருந்த மோதல்கள், திடீ­ரென நிறுத்­தப்­பட்­டது, இந்­திய– – பாகிஸ்தான் மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி, பிராந்­தி­யத்தில் உள்ள நாடு­க­ளுக்கும் கூட நிம்­ம­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

பஹல்­காமில், இடம்­பெற்ற தீவி­ர­வாதத் தாக்­கு­த­லுக்கு பதி­ல­டி­யாக, பாகிஸ்­தானில் உள்ள இலக்­கு­களின் மீது ஏவு­கணை மற்றும் ட்ரோன்­களின் மூலம் இந்­தியா தாக்­கு­தல்­களை நடத்­தி­யது.

தமது இலக்கு பயங்­க­ர­வாத முகாம்கள் தான் என்றே முதலில் இந்­தியா கூறி­யது.

அதை­ய­டுத்து, பாகிஸ்­தானின் படைத்­த­ளங்­களை செய­லி­ழக்கச் செய்யும் இலக்­குடன் இந்­தியா செயற்­படத் தொடங்­கி­யது.

அதை­ய­டுத்து பாகிஸ்­தானும் பதி­லுக்கு ட்ரோன்­க­ளையும் ஏவு­க­ணை­க­ளையும் கொண்டு, இந்­தி­யாவின் மீது தாக்­குதல் தொடுத்­தது.

இது தரப்பும் பெரும் தாக்­கு­த­லுக்கு தயா­ராகிக் கொண்­டி­ருந்த நிலையில், திடீ­ரென அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், இந்­தி­யாவும் பாகிஸ்­தானும் போரை ­நி­றுத்­து­வ­தற்கு இணங்­கி­யி­ருப்­ப­தாக அறி­வித்­தி­ருந்தார். அமெ­ரிக்க துணை ஜனா­தி­பதி ஜே.டி.வான்ஸ், இந்­திய- –பாகிஸ்தான் மோதல்­களில், அமெ­ரிக்கா தலை­யி­டாது என்றும் அது தங்­களின் வேலை இல்லை என்றும் கூறி­யி­ருந்தார்.

அவர் அவ்­வாறு கூறி 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள், இரண்டு நாடு­களும் போர் ­நி­றுத்தம் செய்ய இணங்கி இருப்­ப­தாக, அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப் அறி­வித்தார்.

இந்தப் போரில் அமெ­ரிக்கா தலை­யி­டாது என்று கூறி­விட்டு, திடீ­ரென ட்ரம்ப் ஏன் தலை­யீடு செய்து, போரை நிறுத்­தினார் என்ற கேள்­விக்­கான சரி­யான பதில் இல்லை.

போர் அவ­சி­ய­மற்­றது, என்­பதில், மாற்றுக் கருத்­தில்லை.

ஆனால், இந்தப் போர் விட­யத்தில் ட்ரம்ப்பின் தலை­யீடும் சரி, இந்­தியா–- பாகிஸ்தான் குறு­கிய காலத்­துக்குள் தங்­களின் முடிவை மாற்றிக் கொண்­டதும் சரி பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­கி­ன்றன.

ஒப்­பீட்­ட­ளவில், பாகிஸ்­தானை விட, பல­மான நிலையில் உள்ள நாடு இந்­தியா.

சனத்­தொ­கையும் சரி, படை பல ரீதி­யா­கவும் சரி, இந்­தியா வலு­வா­னது.அதற்கு அப்பால், இந்­தி­யாவின் அர­சியல் தலை­மைத்­துவம் இன்­னமும் வலு­வா­னது.

அது, எந்த சவா­லையும் எதிர்­கொள்ள கூடிய அள­விற்கு பல­மா­ன­தாக உள்­ளது.

பாகிஸ்­தானின் நிலைமை அப்­ப­டி­யல்ல, இப்­போ­தைய பிர­த­மரும் சரி, ஏனைய தலை­வர்­களும் சரி, வலு­வான தலை­வர்கள் அல்ல.

இதற்கு முன்னர், இந்­தி­யா­வுடன் மல்­லுக்­கட்­டிய ஜெனரல் ஷியா உல் ஹக், நவாஸ் ஷெரீப், ஜெனரல் பர்வேஸ் முஷாரப், பெனாஸிர் பூட்டோ, இம்ரான் கான் போன்­ற­வர்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில், இப்­போ­தைய தலைமை பல­வீ­ன­மா­னது.ஆனாலும், இந்­தி­யாவை எதிர்க்கத் துணிந்­தது பாகிஸ்தான்.

இந்தப் போரில் போலிப் பரப்­புரை தீவிர தாக்கம் செலுத்­தி­யது.

இன்­றைய நவீன உலகில், போர்க்­களத் தக­வல்­களை கணத்­துக்கு கணம் பரி­மாற முடியும். அதற்கு, சமூக ஊடக வச­திகள் இருக்­கின்­றன. அர­சாங்கம் தக­வல்­களை வெளி­யிடும் வரைக்கும் காத்­தி­ருக்க வேண்­டிய தேவை இல்லை.

எங்­கேயோ இருக்கும் ஒருவர் சமூக ஊட­கத்தில் ஒரு காணொ­ளி­யையோ- தக­வ­லையோ பதி­விட்டு விட்டால் அது உலகம் முழு­வ­தற்கும் சென்று சேரும்.

இப்­ப­டி­யான நிலையில், போர் தொடங்­கி­யதும் தாக்­கு­தல்கள் தொடர்­பாக போலிச் செய்­தி­களே அதிகம் பர­வின.

சமூக ஊட­கங்கள் முழு­வ­திலும், அந்த போலிச் செய்­திகள், குப்­பை­யாக குவிந்து கிடந்­தன. எங்­கேயோ, எப்­போதோ நடந்த சம்­ப­வங்­களை இணைத்து, பயிற்­சி­களின் போது எடுக்­கப்­பட்ட காணொ­ளி­க­ளையும் வீடியோ விளை­யாட்­டு­களில் உள்ள காணொ­ளி­க­ளையும் இணைத்து, போலி­யான காணொ­ளி­களும் படங்­களும் வெளி­யி­டப்­பட்­டன.

அவ்­வாறு வெளி­யி­டப்­பட்ட போலி செய்­திகள், தக­வல்கள், பெரும்­பாலும் இந்­தியத் தரப்­பி­னரால் வெளி­யி­டப்­பட்­டவை என்­பதில் சந்­தேகம் இல்லை.

பாகிஸ்தான் படை­களை துரத்தி விட்டோம், என்­பது போல இந்­தி­யாவின் பிர­தான ஊடங்­களும், மிகைப்­ப­டுத்­தப்­பட்ட செய்­தி­க­ளுடன் மக்­களை முட்­டாள்­க­ளாக்க முயன்­றன.

போர்­முனை உணர்­வு­பூர்­வ­மான ஒரு இடம். அங்கு எப்­போ­துமே உண்­மைக்கு இடம் இருப்­ப­தில்லை.

ஆனால் இந்தப் போர்­மு­னையில் தாக்­கு­தல்கள் தொடர்­பா­கவும், இழப்­புக்கள் தொடர்­பா­கவும் வெளி­யி­டப்­பட்ட பெரும்­பா­லான செய்­திகள், தக­வல்கள், படங்கள், காணொ­ளிகள் எல்­லாமே மக்­களை தவ­றாக வழி நடத்தும் நோக்கம் கொண்­ட­வைகளாக இருந்­தன.

இந்தப் போர் தங்­க­ளுக்கு சாத­க­மான முறையில் சென்று கொண்­டி­ருக்­கி­றது என மக்­களை நம்ப வைப்­ப­தற்­காக, அதனை ஊக்­கு­வித்த தரப்­புகள் யார் என்று ஊகிப்­பது கடி­ன­மல்ல.

பாகிஸ்­தானில் உள்ள பயங்­க­ர­வா­தி­களின் இலக்­குகள், படைத்­த­ளங்­களை தாக்கி அழித்­த­தாக, இந்­தியா கூறி­யி­ருந்­தாலும் அவை எல்லாம் உண்­மை­யா­னவை என்று நம்ப முடி­யாது.

அந்த தாக்­கு­தல்­களில் 31 பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­தாக பாகிஸ்தான் கூறி­யி­ருந்­தாலும் அதுவும் கூட உண்­மை­யா­னதா என்று எடுத்துக் கொள்ள முடி­யாது. கொல்­லப்­பட்­ட­வர்­களில் தீவி­ர­வா­திகள் இருக்­கலாம், பொது­மக்கள் இருக்­கலாம், பாகிஸ்தான் படை­யி­னரும் இருக்­கலாம்.

முதல் நாள் தாக்­கு­தலின் போது, இந்­தி­யாவின் இரண்டு ரபேல் போர் விமா­னங்­களை சுட்டு வீழ்த்­தி­ய­தாக பாகிஸ்தான் உரிமை கோரி­யது.

அதை­விட, மேலும் மூன்று மிக், போர் விமா­னங்­க­ளையும் சுட்டு வீழ்த்­தி­ய­தாக கூறி­யது. ஆனால் இந்­தியா அதனை முதலில் மறுத்­தது. தங்கள் தரப்பில் ஏற்­பட்ட இழப்­புக்­களை இந்­தியா இன்று வரை வெளி­யி­ட­வே­யில்லை.

இன்­னமும் போர்ச் சூழல் மாற­வில்லை என்று தெரி­வித்­துள்ள இந்­தியா, இழப்­பு­களை விட இலக்­குகள் தான் முக்­கி­ய­மா­னவை என்றும், தளங்­களை தாக்கி அழிப்­பதில் இந்­தியா வெற்றி பெற்­றி­ருப்­ப­தா­கவும் கூறி­யி­ருக்­கி­றது.

தருணம் வரும்­போது, இந்­தி­யா­வுக்கு ஏற்­பட்ட இழப்­புகள் தொடர்­பான மேல­திக தக­வல்­களை வெளி­யி­டு­வ­தா­கவும் இந்­திய பாது­காப்பு அதி­கா­ரிகள் கூறி­யி­ருக்­கி­றார்கள்.

இதி­லி­ருந்து, இந்­தியா உண்­மையை மறைக்­கி­றது, தனக்கு ஏற்­பட்ட இழப்­பு­களை வெளி­யிட விரும்­ப­வில்லை என்­பதை, தெளி­வாக உணர்ந்து கொள்ள முடி­கி­றது.

ரபேல் போர் விமா­னங்­களை இந்­தியா இழந்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­வதில் உண்மை இருக்­கலாம் என்று கூறப்­ப­டு­கி­றது.

தாக்­கு­த­லுக்குச் சென்ற தமது விமா­னிகள் அனை­வரும் பத்­தி­ர­மாக திரும்­பி­யி­ருக்­கின்­றனர் என்று கூறிய இந்­திய விமா­னப்­படை பேச்­சாளர், தமது விமா­னங்கள் அனைத்தும் பாது­காப்­பாக தளம் திரும்­பி­யி­ருப்­பதாக கூற­வில்லை. எந்த விமா­னமும் பாகிஸ்தான் பக்கம் விழுந்­து­ வி­ட­வில்லை.

அவை காஷ்­மீ­ரிலும், ராஜஸ்­தா­னிலும், பஞ்­சா­பிலும் விழுந்­தி­ருக்­கின்­றன. அவை எத்­தனை என்­ப­துதான் கேள்வி.

இந்­தியா அதனை தருணம் வரும்­போது வெளி­யி­டுமா என்­பது சந்­தேகம்.

ரபேல் போர் விமா­னங்­களில், இந்­தியா அண்­மையில் பெரு­ம­ளவில் முத­லீடு செய்­தது. அந்த விமா­னங்கள் விழுந்து நொறுங்­கினால், இந்­திய மக்­களின் கேள்­வி­க­ளுக்கு அர­சாங்கம் பதி­ல­ளிக்க வேண்­டி­யி­ருக்கும்.

இந்­திய மக்­களின் மன உறு­தியை அது உடைக்கும், அதனால் இந்­தியா இது­போன்ற தக­வல்­களை மறைக்­கி­றது என்­பது தெளி­வாக தெரி­கி­றது.

பாகிஸ்­தானும் இதே­போன்ற ஒளிப்பு, மறைப்­பு­களில் ஈடு­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் இருக்­கின்­றன.

இந்தப் போர் தீவி­ர­மான கட்­டத்தை அடையும் என்று யாரும் எதிர்­பார்க்­க­வில்லை.

திடீ­ரென பாகிஸ்தான் தேசிய கட்­டளை ஆணை­யத்தின் கூட்­டத்தைக் கூட்­டி­யது.

இது அணு­சக்தி ஆயு­தங்­களை பயன்­ப­டுத்­து­வது தொடர்­பாக தீர்­மானம் எடுப்­ப­தற்­கான குழு­வாகும்.

இதன் பின்­னரே அமெ­ரிக்­காவின் தலை­யீடு உறு­தி­யா­னது, ட்ரம்ப் தலை­யீடு செய்து இரண்டு நாடு­க­ளையும் அமை­திப்­ப­டுத்த தீர்­மா­னித்தார்.

ஆனால், இந்த தலை­யீட்டை இந்­தியத் தரப்பு விரும்­பி­ய­தாக தெரி­ய­வில்லை.

அதனால் தான் போர்­நி­றுத்த அறி­விப்பை ட்ரம்ப் அறி­வித்­தி­ருக்­கிறார்.

போர் நிறுத்தம் தொடர்­பாக உண்­மையில் அறி­வித்­தி­ருக்க வேண்­டி­யது இரண்டு நாடு­களின் அர­சாங்­கங்­களும் தான்.

ஆனால், அமெ­ரிக்­காவே இந்த தீர்­மா­னத்தை அறி­வித்­தது

இந்த போர் நிறுத்தம் அர­சியல் தலை­வர்­களின் உடன்­பாட்டின் அடிப்­ப­டையில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஒன்று அல்ல.

இரா­ணுவ மட்­டத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட உடன்­பாட்டின் அடிப்­ப­டை­யி­லா­னது.

போரை நடத்­து­வ­தற்கு இரண்டு நாடு­களும் இரா­ணு­வத்­துக்கு அதி­கா­ரத்தை கொடுத்­தி­ருந்­தன.

அதே­போல போரை நிறுத்­து­வ­தற்கும் தவிர்க்க முடி­யா­த­படி இரா­ணு­வத்­துக்கு அதி­காரம் அளிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டு­விட்­டது.

இல்­லா­விட்டால், போர் இன்­னொரு கட்­டத்தை நோக்கி நகர்ந்­தி­ருக்கும்.

போர்­ நி­றுத்­தத்­துக்கு இணங்­காமல் போயி­ருந்தால் அழுத்­தங்கள் அதி­க­ரித்­தி­ருக்கும்.

இந்தப் போர் இடை­நி­றுத்­தப்­படும் அறி­விப்பு வெளி­யா­னதும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதனை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

உண்மையில் இந்தப் போரினால் அதிகம் சிக்கலை எதிர்கொண்டவை, இலங்கை போன்ற நாடுகள் தான்.

அவை ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு நாட்டை சார்ந்திருந்தன.

இலங்கை இரண்டு நாடுகளுக்கும் சார்பில்லை, நாங்கள் நடுநிலை என்று தூக்கிப் பிடித்துக் கொண்டு இருந்தது.

இந்த நடுநிலை நீண்ட நாட்களுக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய ஒன்று அல்ல.

இந்தியா – பாகிஸ்தான் இடையில் முழு அளவிலான போர் தொடங்கியிருந்தால், இரண்டு நாடுகளிடம் இருந்தும், இலங்கை கடும் அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கும்.

அந்த அழுத்தங்களில் இருந்து, இலங்கையை காப்பாற்றியிருக்கிறது போர்நிறுத்த உடன்பாடு.

அதனால் தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க போர் நிறுத்தத்தை வரவேற்றிருக்கிறார். இருந்தாலும், இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் தொடர் கிறது. அது நீடிக்கும் வரை இலங்கை நிம்மதியாக இருக்கப் போவதில்லை.

-ஹரி­கரன்-

Share.
Leave A Reply