இலங்கையில் வெளிநாட்டு பெண் ஒருவர் ஹோட்டல் ஒன்றில் வைத்து தாக்கப்பட்ட நிலையில், அவரின் காதலன் என கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது விசா நீட்டிப்பை கொண்டாட தனது காதலனுடன் பியகமாவில் உள்ள ஹோட்டலுக்குச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர், அவரின் காதலனால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய அவரது இலங்கை காதலன் நேற்று கைது செய்யப்பட்டதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டுப் பெண்

தாக்குதலில் காயமடைந்த வெளிநாட்டுப் பெண் தற்போது முல்லேரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு, மருதானையை சேர்ந்த 25 வயதுடையவராகும்.

வெளிநாட்டுப் பெண் கடந்த ஆண்டு இலங்கைக்கு வந்து கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரியும் போது சந்தேக நபருடன் காதல் உறவை வளர்த்துக் கொண்டார்.

விசா நீடிப்பு

அந்த வெளிநாட்டுப் பெண் நீண்ட காலம் நாட்டில் தங்க அனுமதிக்கும் வகையில் விசா நீட்டிக்கப்பட்ட பின்னர் அதனை கொண்டாடுவதற்காக பியகமாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தன்னுடன் சேர்ந்து பியர் குடிக்க தனது காதலனை அழைத்தார்.

அதற்கமைய, நேற்று முன்தினம் மதியம் ஹோட்டலுக்குச் சென்று பியர் குடித்துக்கொண்டிருந்தபோது, ​​இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply