யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முதலி கோவில் பகுதியில் வாளுடன் நடமாடிய சந்தேகநபர் ஒருவரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த நபர், பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். நீதிவானின் உத்தரவின் பேரில், குறித்த சந்தேகநபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply