மா ஓயா நதி நிரம்பி வழிந்ததால் சேதமடைந்த, அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ ஆகிய இடங்களுக்கு இடையே உள்ள புஜ்ஜோமுவ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட 45 அடி ஆழப் பள்ளம், இலங்கை இராணுவத்தின் உதவியுடன் சரிசெய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான, வடக்கு மற்றும் கிழக்கு வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதால், இன்று (டிசம்பர் 10) முதல் ரம்புக்கன, பொல்கஹவெல மற்றும் குருநாகலிருந்து புறப்படும் அலுவலகத் தொடருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply