நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமையை தொடர்ந்து, மேல் மாகாணத்தில் சுமார் 40,000 மெட்ரிக் டன் குப்பைகள் குவிந்துள்ளன.
மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் தலைவர் சதுரு கஹந்தவ ஆராச்சி தெரிவித்தபடி, கொடிகாவத்தை, முல்லேரியா, கொலன்னாவை மற்றும் கடுவெல போன்ற உள்ளூராட்சி பிரதேசங்களில் அதிக அளவு குப்பைகள் குவிந்துள்ளதாக கூறியுள்ளார்.
இருப்பினும், இன்னும் சிறிய அளவிலான குப்பைகள் அகற்றப்பட வேண்டியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பேரிடரால் அதிகம் பாதிக்கப்பட்ட கம்பளை நகரில், 400 மெட்ரிக் டன்களுக்கும் மேலான குப்பைகள் குவிந்துள்ளதால், அந்தப் பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குப்பை அகற்றும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது.

